விரிவாண செய்தி: கோவையில் சிஐடியூ மாநாடு வெற்றி இன்னும் பல செய்திகள்
????விண்மீண்நியூஸ்???? கோவையில் சிஐடியூ சார்பில்
தொழில் பாதுகாப்புமாநாடு
திரளாய் பங்ககேற்ற சிறுகுறுந்தொழில் அதிபர்கள் தொழிலாளர்கள் ஒன்றாய்
திரண்ட மாநாடு
சாதாரணமாக,
தங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தித்தான், தொழிற்சங்கங்கள் மாநாடு நடத்துவது வழக்கம்.
ஆனால்,
தற்போதுள்ள சூழலில், தொழிலைப் பாதுகாத்தால்தான், தொழிலாளிகளைப் பாதுகாக்க முடியும் என்பதால், இந்திய தொழிற்சங்க மையம் (CITU), முதலாளிகளையும் உடன் சேர்த்துக்கொண்டு, தொழில் பாதுகாப்பு மாநாட்டை இன்று, கோவையில் நடத்தியது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சில:
- பஞ்சின் விலையில் ஏற்றத்தாழ்வைத் தவிர்க்கும் பொருட்டு, அதன் விலையை ஆண்டுக்கொரு முறை நிர்ணயிக்க வேண்டும்.
- பம்ப் செட் தொழிலுக்கு 5% GST நிர்ணயிக்க வேண்டும்.
- ஜாப் ஆர்டர்களுக்கு GST கூடாது.
- விசைத்தறிகளுக்கு, 1500 யூனிட்கள் இலவச மின்சாரம்.
- GST refund-ல், காலதாமதம் கூடாது.
இக்கோரிக்கைகள் நிறைவேறாவிடில், வருகின்ற டிசம்பர் மாதம் 13-ந் தேதியில், கோவையில் கதவடைப்புப் போராட்டம் நடத்தப்படும்.
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஷேர் ஆட்டோவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்கின்றனர். இதில் முக்கிய செய்தி என்னவென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பள்ளி குழந்தை ஷேர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து உயிர் என்பது குறிப்பிடத்தக்கது.
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: சென்னை மாம்பாக்கம் வாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ரோஷினி என்கிற மாணவி மாதாந்திர பள்ளித் தவணை கட்டாத காரணத்தால் பள்ளியைவிட்டு திருப்பி அனுப்பி விட்டனர் இச்செய்தியை தேசிய ஊடகவியலாளர் நல சங்கத்திற்கு எட்டியவுடன் நம்மால் இயன்ற தொகையான 3000 ரூபாய் வழங்கினோம் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு ஜெயகிருஷ்ணன் பொருளாளர் சந்தோஷ் இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் பிரபு ஆகியோர் உடன் உள்ளார்கள்
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: வேதாரண்யம் அகஸ்தியன் பள்ளியை சேர்ந்த செந்தில் என்பவர் 11/09/2019அன்று படுகொலை செய்யப்பட்டார்.இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவரின் மனைவி மற்றும் தாயாரும் படுகாயமடைந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர் இந்நிலையில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்த வேதாரண்யம் DSP திரு.A.சபியுல்லா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அவரின் மூன்று குழந்தைகளுக்கும் கல்விச் செலவை ஏற்றுக் கொள்வதாக கூறி இறந்த செந்திலின் இறுதி சடங்கிற்கு தனது மனிபர்சை எடுத்து DSP அவர்கள் அதில் உள்ள மொத்த பணத்தையும் கொடுத்த நிகழ்வை பார்த்த அவ்வூர் மக்கள் நெகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க நன்றி கூறினார்கள்
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: கோயில் பத்து மணிக்கு நடை சாத்தப்படும் சாத்திய உடன் பொதுமக்கள் அனைவரும் வெளியேற வேண்டும் இது ஐதிகம் இரவு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலிலேயே தங்கி இந்த அலங்காரத்தை செய்துள்ளார்கள் இதற்கு யார் அனுமதி தந்தது பொதுமக்கள் ஒருவன் பதினோரு மணிக்கு மேல் இருந்துவிட்டால் அவனை தேடி வெளியேற்றும் பொது தீட்சிதர்கள் பதில் கூறுங்கள் தங்க கலசத்தின் மீது கால் வைத்து பூ அலங்காரம் செய்பவர் யார் அனுமதி தந்தது
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪இராஜினாமா செய்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ட்வீட் :
சுபஸ்ரீ நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க வேண்டும்.
ஆனால், நாம் அவரை இழந்துவிட்டோம்.
பேனர் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டிய நேரம் இது.
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪துருக்கியில் குண்டுவெடிப்பு 10 பேர் படுகாயம் :
துருக்கி நாட்டில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪ #BREAKING :
நாளை நடைபெற உள்ளதாக இருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ரத்து – பத்திரிகை தகவல் பணியகம்.
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை
பொறுப்பு சார்பதிவாளராக இருக்கும் ஆனந்த் என்பவரிடம் ரூ.60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து விசாரணை
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: ⚫⚪”எங்களை விட சுபஸ்ரீயை கடவுள் அதிகம் நேசித்துவிட்டார்” – அலுவலக நண்பர்கள் உருக்கம்
சுபஸ்ரீயின் இருக்கைக்கு அருகே மலர்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அந்தப் புகைப்படத்தில் ‘நாங்கள் சுபஸ்ரீயை அதிகம் நேசித்தோம், ஆனால் கடவுள் அதைவிட அதிகமாக நேசித்துவிட்டார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்விட்டரில் ‘#WhoKilledShubashree’, #BannerKilledShubashree ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகியிருக்கின்றன.
பேனரால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் அலுவலக நண்பர் ஒருவரின் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
[9/14, 6:42 AM] விண்மீண்நியூஸ்2: ?⚪ நாகப்பட்டினத்தில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது :
திருக்குவளை : கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்ற ரூ.7000 லஞ்சம்
தெற்கு பனையூரில் ரூ.7000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ வீரக்குமாரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.????????winmeennews.com??????