ஒரே நாளில் ரூ35ஆயிரம் கோடி✍️ மீண்டும் ஆசியாவின் மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்
ஒரே நாளில் ரூ.35 ஆயிரம் கோடி….. மீண்டும் ஆசியாவின் மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி…
முகேஷ் அம்பானி
கடந்த புதன்கிழமையன்று பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ.43,574 கோடி முதலீடு செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனால் அன்றைய தினம் இந்திய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கு விலை 10 சதவீதம் உயர்ந்தது. இதன் விளைவாக முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.35,250 கோடி உயர்ந்து ரூ.3.69 லட்சம் கோடியாக உயர்ந்தது.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்ததால், புளூம் பெர்க்-ன் ஆசியாவின் மெகா கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். புளூம் பெர்க் மெகா கோடீஸ்வரர்கள் குறியீட்டின்படி, ரூ.3.69 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஆசியாவின் மெகா கோடீஸ்வரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.
இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்ட ஜாக் மாவின் மொத்த சொத்து மதிப்பை காட்டிலும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.24,000 கோடி அதிகமாகும். ஜாக் மாவின் அறக்கட்டளை இந்த வாரம் உலக சுகாதார அமைப்புக்கு 10 கோடி மாஸ்க்குகளை நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.