கோகுலம்கார்டன் நிறுவணம் சார்பாக 21 நாட்களாக கோவை , திருப்பூர்,விருது நகரிலுள்ள 2500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிப்பொருள்கள் மற்றும் உணவுகள் சமூலவிலகலை கடைப்பிடித்துவழங்கள்?முழுவிபரம் -விண்மீன்நியூஸ்
கோவையிலுள்ள அதிமுகவைச்சேர்ந்த கோகுலம் கார்டன் நிறுவண சகோதரர்கள் சார்பாக திருப்பூர் கோவை ,விருதுநகரிலுள்ள 2500குடும்பங்களுக்கு 21 நாட்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார்கள்*
திருப்பூர், கோவை, விருதுநகர் பகுதியில் கோகுலம் கார்டன் சகோதரர்கள் சார்பாக வறுமை நிலையில் உள்ள ஒவ்வொரு ஊரிலும் 2500 குடும்பங்களுக்கு சமைத்த சூடான உணவுகள் மற்றும் அரிசி, பருப்பு, மிளகு, சீரகம், சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கபட்டது.
கோகுலம் கார்டன் தலைவர் M. தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வட்டார தாசில்தார் அதிமுக நிர்வாகிகள், கோகுலம் கார்டன்நிர்வாக அதிகாரி வில்சன், சுகாதாரதுறை அதிகாரி மற்றும் காவல்துறை உதவி ஆணையர் ஆகியோருடன் இனைந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.
அந்த பகுதியில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்கள் மற்றும் வறுமையில் உள்ளவர்கள் அனைவர்க்கும் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து பேசிய கோகுலம் கார்டன் தலைவர் தங்கராஜ் மக்களுக்கு அருகில் சென்று, நிவாரண பொருட்களை வழங்க கூடாது, கூட்டம் சேர்க்க கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியதால் பலரை அழைக்க இயலவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் பொருளுதவியாகவும், உணவு வழங்கிய கோகுலம் தலைவர் M.தங்கராஜ் அணைவருக்கும் நன்றி கூறினார்.