பத்மஸ்ரீDr சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு 7ஆம்ஆண்டு நினைவுநாள்? உலக ,இந்திய, தமிழக மக்கள் புகழ் வணக்கஅஞ்சலி?(19.04.2013) முழுவிபரம்-விண்மீன் நியூஸ்
பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு 19:04:2013 7ஆம் ஆண்டு நினைவு நாள் புகழ்வணக்கம
தமிழக மக்களால் “சின்னஅய்யா” என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவர் பத்மஸ்ரீ, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்
பத்திரிகை, கல்வி, ஆன்மீகம், விளையாட்டு, பொதுச்சேவை ஆகிய 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சாதனைகள் காலத்தால் மறக்க இயலாதவை
சாதி, மதம் கடந்து தன்னலமற்ற வகையில் இந்த 5 துறைகளிலும் அவர் செய்துள்ள சேவைகள் ஆன்மீகத்தில் தமிழகத்தையும், விளையாட்டு துறையில் இந்தியாவையும் உலக அரங்கில் தலைநிமிர செய்துள்ளது
கல்வி, விளையாட்டு, ஆன்மீகம் துறைகளில் அவர் செய்த மகத்தான சேவைகளை பாராட்டி 5 பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி உள்ளது
சென்னை பல்கலைக்கழக வரலாற்று 150 ஆண்டுகால வரலாற்றில் இதழாளர் ஒருவர் டாக்டர் பட்டம் பெற்றது அய்யா மட்டுமே
1982/83 இரண்டு முறை சென்னை மாநகர செரிப்பாக அய்யாஅவர்கள் பொறுப்பு வகித்தார்கள்
மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சர்வதேச ஒலிம்பிக் கழகம் “ஸ்போர்ட்ஸ் அண்டு ஸ்டடி அவார்டு” வழங்கி பெருமைப்படுத்தியது
காஞ்சி மகாபெரியவர், கிருபானந்த வாரியார், மதுரை ஆதீனம் உள்பட ஏராளமான ஆன்மீக பெரியவர்களும் டாக்டர் சிவந்தி ஆதித்தனாருக்கு பல்வேறு பட்டங்களை சூட்டி மகிழ்ந்து உள்ளனர்
தமிழ்நாடு அரசு திருச்செந்தூர் வீரபாண்டிய பட்டிணத்தில் 21:02:2020 அன்று பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டி மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் அமைச்சர்கள் முன்னிலையில் திறந்து வைத்து சின்ன அய்யாவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் பதித்தார்கள்
சட்டச் சபையில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பிறந்த தினவிழா(24:09:2020) அரசு விழாவாக கொண்டாடப்படும் என மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் தெரிவித்தார்கள்
ஜாதி மதம் இனத்திற்கு அப்பாற்பட்டு அய்யா அவர்கள் செய்த நற்பணிகள் அதனால் பயன் அடைந்த லட்சக்கணக்கான மக்கள்