தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகளுக்கு அகில இந்திய நாடார் பேரவையின் அன்பான வேண்டுகோள்?
தமிழ்நாட்டில் உள்ள நாடார் சங்க நிர்வாகிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!
அன்புடையீர் ! வணக்கம்!!
நான் சென்னை ஈக்காடுதாங்கல் பாலகிருஷ்ணன் பேசுகிறேன் . கிட்டத்தட்ட தமிழ்நாடு முழுவதும் நாடார் சங்கங்கள் இல்லாத ஊர்கள் இல்லை என்ற ஒரு நிலை உள்ளது . அதன் நிரவாகிகளுக்கு அன்பான வேண்டுகோள்.
இந்த குரானா ஊரடங்கு மேலும் பதினைந்து நாட்கள் நீடிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் மளிகை , காய்கறிகடை நடத்துபவர்களுக்கு சாப்பாட்டுப் பிரச்சனை இருக்காது , ஆனால் அந்தந்த பகுதியில் சுய தொழிலாக டைலரிங் செய்பவர்கள், ஆட்டோ கார் ஓட்டுபவர்கள் சிறிய காயலான் கடை வைத்திருப்பவர்கள் கூலி வேலை செய்பவர்கள் என வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு அன்றாட வாழ்க்கையை சிரமப்பட்டு நடத்தி வரும் நமது சமுதாய மக்களின் பசியை போக்கும் விதமாக ஒவ்வொரு சங்கமும் குறைந்தது 10 பேருக்காவது 3000 ரூபாய்க்கு குறையாமல் மளிகை பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்யுங்கள். ???
இதற்காக கமிட்டியை கேக்கணும் பொதுக்குழுவை கேக்கணும் என சொல்லி தட்டி கழிக்காதீர்கள்.கேட்டால் கொடுப்போம் என இருக்காதீர்கள்.
ரோஷக்கார நாடார் வீராபில் பட்டினி கிடப்பான் சாப்பாட்டுக்கு உதவி கேட்க மாட்டான்.
சங்கத்தில் பணம் இல்லை அந்த சங்கம் செய்ய வில்லை நாம் எப்படி என்று சொல்லி தட்டி விடாதீர்கள்..
காலத்தில் இடுக்கண் களைவது. நமது கடமை..?????????
அன்புடன்
S. பாலகிருஷ்ணன்
செயலாளர்
அகில இந்திய நாடார் பேரவை