கோவில்பட்டி நகர பாஜக சார்பில் குழந்தைகள், முதியவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்கி கொரனா விழிப்புணர்வு?அறிவுரை?
கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தின்பண்டங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது
இன்று கோவில்பட்டி வள்ளுவர் நகரில் பாஜக நகர தலைவர் M.பாலசுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தின்பண்டங்கள் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வழங்கபட்டது. 10 வது வார்டு கிளை தலைவர் குருசாமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது .
ஊரடங்கு உத்தரவின் அவசியத்தையும், சமூக விலகல் குறித்தும், கொரானா வைரஸ் பரவுவது பற்றியும் குழந்தைகளுக்கு எடுத்து விளக்கபட்டது.
குழந்தைகள் அனைவரும் அவர் அவர் வீடுகளில் அவர்களின் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் தம்பி, தங்கைகளுடன்னும் தாத்தா, பாட்டி உடனும் விளையாடி பொழுதை கழிக்கும் மாறு அறிவுரைகள் கூறி அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். உடன் நகர பொதுச் செயலாளர் பாசமிகு அண்ணன் முனியராஜ் அவர்கள், பாசமிகு அண்ணன் போலிஸ் சீனிவாசன் அவர்கள், நகர பொருளாளர் அண்ணன் R.P.முருகன் அவர்கள், முன்னாள் நகர இளைஞர் அணி துணை தலைவர் சகோதரர் குருதேவேன் அவர்கள், 9 வது கிளை தலைவர் அண்ணன் செந்தில்குமார் அவர்கள் உடன் இருந்தனர்.