காட்டில் நெருப்புப்பற்றி எரிந்தால் எந்த மிருகம் பாதுகாப்பாக இருக்கும் -✍️✍️விண்மீன்நியூஸின் குட்டிகதை✍️✍️
விதுரர் சந்தர்ப்பம் பார்த்து யுதிஷ்டிரரிடம் கேள்வி கேட்டார்
“மகனே, ஒரு வேளை காட்டில் நெருப்புப் பற்றி எரிந்தால் எந்த மிருகம் மட்டும் பாதுகாப்போடு இருக்கும்”.
யுதிஷ்டிரர் பதில் சொன்னார்” தந்தையே, காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டால் சுயேச்சையாகவும், பயமற்றும் சுற்றித் திரியக் கூடிய சிங்கம், புலி ,சிறுத்தை,யானை மற்றும் மிக வேகமாக ஓடக் கூடிய மான் போன்ற அனைத்து மிருகங்களும் காட்டுத் தீயில் எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் வலைகளில் வசிக்கும் எலிகள் மாத்திரம் அனல் தணிந்த பிறகு வெளியில் வந்து அமைதி நிறைந்த வாழ்க்கை வாழும்…!”
மகனே ,யுதிஷ்டிரா உன் பதிலால் நான் கவலையற்றவன் ஆனேன். செல், பாதுகாப்பாக இரு, புகழுடன் இரு என்று ஆசீர்வாதம் கொடுத்தார்.
வைரஸ் கிருமி கூட ஒரு பயங்கர நெருப்புக்கு சமமாக உள்ளது. தொடர்ந்து அனைத்து எல்லையையும் தாண்டி விட்டது. இப்போது தன்னுடைய வீட்டிற்கு உள்ளேயே யார் இருப்பார்களோ, அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் மேலும் உலகில் கவலையற்ற மகாராஜாவாக வாழ்வார்கள்.
இது ஒரு லட்சுமண் ரேகை தாண்டாதீர்.
தாண்டினால் சோக வனம் தான்.
14 ஆண்டுகள் அல்ல. 14 நாட்கள் மட்டுமே.