தமிழகத்தில் இன்று(6.3.2020) மாவட்டங்களில் நடந்த செய்திகள்
மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை
மதுரை மேலூரில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதற்காக முத்தரசன் மீது வழக்குப்பதிவு
திருச்சியில் காவலாளி தலையில் கல்லைப் போட்டு கொல்ல முயலும் சைக்கோ: திடுக்கிடும் சிசிடிவி காட்சி வெளியீடு
ராமநாதபுரம் தொண்டியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் ராஜலட்சுமி கைது.
ராஜலட்சுமியிடம் சிகிச்சை பெற்ற பெண் இருந்ததையடுத்து போலீசாரின் விசாரணையில் அவர் போலி மருத்துவர் போலி என்பது தெரியவந்தது
தென்காசி அருகே மணல் கடத்தல் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற புதிய தலைமுறை செய்தியாளர் மீது தாக்குதல் முயற்சி நடந்துள்ளது.
திருச்சியில் கொரோனா சோதனை மேற்கொண்ட மூவருக்கும் சாதாரண காய்ச்சல்
தூத்துக்குடி
திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழாவையொட்டி சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அங்கு கூடியிருந்த பக்தர்கள், அரோகரா கோஷம் எழுப்பி, முருகனை வழிபட்டனர்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம், வருகிற 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, மாயமான பள்ளி மாணவிகள் 4 பேரை போலீசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நடுப்பேட்டை தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வரும் 4 மாணவிகள் பள்ளிக்கு வரவில்லை.
பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டதில், காட்பாடி ரயில்வே நிலையத்தில் வெளியூர் செல்லும் திட்டத்துடன் 4 மாணவிகள் இருந்தது தெரிய வந்தது.
மாணவிகளை ரயில்வே போலீசார், குடியாத்தம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த் என்பவர் மர்ம நபர்களால் வெட்டப்பட்டதை கண்டித்து
குற்றவாளிகளை கைது செய்ய கோரி இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொட்டம்பட்டி பைபாஸ் சாலையில் லாரி மோதி 8 வயது பள்ளி மாணவன் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, விபத்து நேர்ந்த இடத்தில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி சேலம் சங்ககிரியில் கடந்த மாதம் சொகுசு பேருந்தில் திருட்டு போன ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகள் மீட்பு.
தருமபுரியில் நகை கடையில் விற்க முயன்றபோது நகைகள் மீட்பு – குற்றவாளிகள் தப்பியோட்டம்
மதுரை உசிலம்பட்டி அருகே சடலமாக மீட்கப்பட்ட 1 மாத பெண் குழந்தை எருக்கம்பால் கொடுத்து கொல்லப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோர் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தகவல்
⭐⭐⭐⭐⭐⭐⭐
விண்மீன் நிியூஸ்
செய்தி கதம்பம்
குழுமம்
⭐⭐⭐⭐⭐⭐⭐