சிறார்களிடம் பாலியல் குற்றம் செய்தால் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்
சிறார்களிடம் பாலியல் குற்றம் செய்தால் மரண தண்டனை கூட
விதிக்கப்படலாம் – ஆட்சியர் எச்சரிக்கை
✍தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள
சிறார்களிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றம் என்பது குறித்த எச்சரிக்கை
விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சமூக
பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 18 வயதிற்கு
கீழ் உள்ள சிறார்களிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றம் என்பது குறித்த
எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிடும் நிகழ்ச்சி இன்று
(15.09.2020) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்
நந்தூரி கலந்துகொண்டு, சிறார்களிடம் பாலியல் செயல்பாடு
என்பது குற்றம் என்பது குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை
வெளியிட்டார். விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ரேசன் கடைகளில் ஒட்டுவதற்காக
மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி
தெரிவித்ததாவது
✍பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள சிறுவன் அல்லது சிறுமியிடம் பாலியல்
செயல்பாடு என்பது குற்றம் ஆகும். இதற்கு மரண தண்டனை கூட
விதிக்கப்படலாம். இந்த குற்ற செயல்கள் குறித்து யார் வேண்டுமானாலும் புகார்
செய்யலாம். தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை
ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறை சார்பில்
வெளியிடப்பட்டுள்ள சிறார்களிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றம் என்பது
குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள
காவல் நிலையங்கள், தேநீர் கடைகள், சலூன் கடைகள் மற்றும் ரேசன்
கடைகளில் ஒட்டப்பட உள்ளது. சிறார்களிடம் பாலியல் செயல்பாடு தொடர்பான
குற்ற செயல்கள் குறித்து பொதுமக்கள் காவல்துறை அல்லது 1098 என்ற
எண்ணில் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிகுமார்
மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.