இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

உயிரோடு இருந்த முதியவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து உயிரிழப்பதற்காக காத்திருந்த தம்பி?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

முதியவரை உயிருடன் குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து காத்திருந்த தம்பி

advertisement by google

✍சேலத்தில் உயிரோடு இருந்த முதியவரை குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியில் வைத்து உயிரிழப்பதற்காக காத்திருந்த அவலம் நிகழ்ந்துள்ளது.

advertisement by google

சேலம் கந்தம்பட்டி பழைய ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த 78 வயதான பாலசுப்பிரமணிய குமார், சகோதரர் சரவணன் மற்றும் குடும்பத்தினருடன் வசிக்கிறார். திங்களன்று பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டதாகக்கூறி, 70 வயதான சரவணன் குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியை வரவழைத்துள்ளார்.பெட்டியை திரும்ப எடுத்துச் செல்வதற்காக வந்தவர்கள், அந்தப் பெட்டிக்குள் முதியவர் உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ந்துபோயினர். அவரது கைகள் கட்டப்பட்டிருந்ததோடு, கண்கள் திறந்திருந்தது. இதுபற்றி கேட்டபோது,இன்னும் சிறிது நேரத்தில் உயிர் போய் விடும் என்று சரவணன் கூறியுள்ளார்.

advertisement by google

✍️இந்த பதிலால் மேலும் அதிர்ச்சியடைந்த குளிர்பதனப் பெட்டிக்காரர்கள், அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். அங்கு வந்த அக்கம்பக்கத்தினர், 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முதியவரை சிகிச்சைக்காக அனுப்பினர். தகவலின்பேரில் வந்த காவல்துறையினர், முதியவர் கையாளப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button