இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பலநூறுகோடி ரூபாய் இழப்பு?
✍? இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு
இந்தியாவில் இணைய சேவை முடக்கப்பட்டதால் பல நூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2018-ம் ஆண்டில் மட்டும் 134 முறை இணைய சேவை முடக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 104 முறை இணைய சேவை முடக்கப்பட்டு இருப்பதாக இணைய சேவை முடக்கங்களை கணக்கிடும் அமைப்பு தெரிவித்துள்ளது.
இணைய சேவைகள் முடக்கப்பட்டதால், டெலிகாம் ஆப்பரேட்டர்களுக்கு ஒவ்வொரு மணி நேரமும் 2.45 கோடி ரூபாய் வீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய செல்லுலார் ஆப்பரேட்டர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ராஜன் மேத்யூஸ் தெரிவித்து உள்ளார்.
2012 முதல் 2017 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 16,000 மணி நேரம் வரை இணைய சேவை முடக்கப்பட்டதாகவும், இதன் மூலம் சுமார் 21,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.