மு.க.ஸ்டாலினுக்கு பாஜக துணைத்தலைவர் திடீர் பாராட்டு கொந்தளிக்கும் பாஜக?
♦மு.க ஸ்டாலினுக்கு பா.ஜ.க துணைத்தலைவர் திடீர் பாராட்டு-கொந்தளிக்கும் பாஜக!
?திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி பேசிய பி.டி அரச குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தரப்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
?புதுக்கோட்டையில் தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் இல்லத் திருமண விழாவில் பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றார்.
?தொடர்ந்து பேசிய அவர், ’முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார். காலம் கணியும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார்.
?தமிழகத்தில் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தவர் மு.க.ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் விரைவில் அரியணையில் ஏறுவார். நாம் அதையெல்லாம் பார்க்க போகிறோம்’ என்று தெரிவித்தார்.
?அவருடைய பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதுதொடர்பாக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஃபேஸ்புக் பதிவில், ‘தி.மு.க திருமண விழாவில் பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் அரசகுமார் தி.மு.க காரனாகவே மாறி பேசியது கண்டிக்கத்தக்கது.
?இந்துத்வா மீது தினசரி சகதிவாரி வீசும் மு.க.ஸ்டாலினுக்கு இவர் சந்தன அபிஷேகம் செய்தது அவரின் பழைய தி.மு.க விசுவாசமா?.
?அவரின் பேச்சை எந்த ஒரு பா.ஜ.க தொண்டனும் ஏற்க மாட்டான். மாநிலத் தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
♦