ஜாண்பான்டியன்,பிரிசில்லாபாண்டியனும் பிரதமர் மோடியை சந்தித்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் கோரிக்கையை அளித்தனர்?
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய நிறுவனர் – தலைவர் திரு பெ. ஜான்பாண்டியன் அவர்களும்,கட்சியின்
மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திருமதி.ஜா. பிரிசில்லா பாண்டியன் அவர்களும்
இன்று புது தில்லியில்
பிரதமர் அலுவலகத்தில் காலை 11.40 மணிக்கு நேரில் சந்தித்தார். மாண்புமிகு பிரதமரிடம்
தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியான் என்ற ஏழு உட்பிரிவுகளை ஒன்றாக ஒன்றிணைத்து
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்க
அரசு ஆணை
வழங்க தமிழக அரசுக்கு மத்திய அரசு சார்பில் பரிந்துரை செய்யும்படியும்
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை
சமூக மக்களின் விருப்பப்படி பட்டியல் சாதியில் இருந்து வெளியேற்றி
தமிழகத்தில் “வேளாண் மரபினர்” என்ற பிரிவின் கீழும்
மத்தியில்
பட்டியல் சாதி அல்லாத
பிரிவில் சேர்க்கும் படியும் கோரிக்கை முன்வைத்தார். அவ்வாறு மாற்றியமைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று
கோரிக்கை மனுவையும்
அளித்தார்.மாண்புமிகு
பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு
அது குறித்து பேசிய
தலைவர் திரு.பெ. ஜான்பாண்டியன் அவர்கள்
பிரதமர் தங்களது கோரிக்கையை முழுமையாக கேட்டதோடு
தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கோரிக்கை குறித்து
தான் முழுமையாக அக்கறையோடு இருப்பதாகவும், ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும்
நிச்சயமாக மத்திய அரசு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் கோரிக்கையை நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.