இந்தியா

பெண்ணிடம் அத்துமீறிய சிறுவனை போலீசார் சுற்றிவளைப்பு?முழுவிவரம் -விண்மீன் நியூஸ்

advertisement by google

பெண்ணிடம் அத்துமீறிய சிறுவன் சுற்றிவளைப்பு

advertisement by google

எண்ணுார் : இளம்பெண்ணிடம், பாலியல் அத்துமீறல் முயற்சியில் ஈடுபட்ட சிறுவனை, போலீசார் மடக்கி பிடித்தனர்.

advertisement by google

எண்ணுாரைச் சேர்ந்த, 21 வயது இளம்பெண், மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து வீடு திரும்பியவரை, பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தண்டவாளம் அருகே, சிறுவன் ஒருவன் மடக்கியுள்ளான்.மதுபோதையில் இருந்தவன், அந்த பெண்ணை, முட்செடியில் தள்ளி, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட முயற்சித்ததாக தெரிகிறது.

advertisement by google

அதற்குள், அவ்வழியே சிலர் வருவதை பார்த்தவன், அங்கிருந்து தப்பியுள்ளான்.பின், முட்செடியில் சிக்கியிருந்த அப்பெண் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில், பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவனை பிடிக்க, உதவி ஆணையர் உக்கிரபாண்டியன் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது.

advertisement by google

போலீசார், நேற்று அதிகாலை, தாழங்குப்பம் கடற்கரையில் பதுங்கியிருந்த, 17 வயது சிறுவனை மடக்கி பிடித்த விசாரித்தனர். அதில், பெண்ணிடம், அத்துமீறியதை ஒப்புக் கொண்டான். வழக்கு பதிவு செய்த, எண்ணுார் அனைத்து மகளிர் காவல் துறையினர், சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button