தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

அசிங்கமாக பேசிய தாய் மாமனை கல்லால் அடித்து கொன்ற மருமகன்?

advertisement by google

மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்…!

advertisement by google

மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்…!
சென்னை: “மாமா.. இப்படி பேசாதே..” என்று சொல்லி சொல்லி பார்த்தார் கோகுல்ராஜ்.. ஆனால், 60 வயது தாய்மாமனுக்கு வாயை திறந்தாலே கூவம்தான்.. தன் அம்மாவை அசிங்க அசிங்கமாக திட்டியதால், கருங்கல்லை கொண்டே தாய்மாமனை அடித்து கொன்றுவிட்டார் கோகுல்ராஜ்!

advertisement by google

சென்னை ஆலந்தூர், ஆசர்கானா பகுதியில் வசித்து வரும் தம்பதி சவுந்தராஜன் – சரஸ்வதி. இவர்களுக்கு 31 வயதில் கோகுல்ராஜ் என்ற மகன் உள்ளார். ஒரு தனியார் கொரியர் ஆபீசில் வேலை பார்க்கிறார்.

advertisement by google

கோகுல்ராஜின் தாய் மாமன், அதாவது சரஸ்வதியின் அண்ணன் எத்திராஜ். இவருக்கு அப்புன் என்று இன்னொரு பட்ட பெயர் உண்டு. 60 வயசு குடிகாரன்.

advertisement by google

தங்கை
தண்ணி போட்டுவிட்டால், தங்கை, தாரை தெரியாது.. நடுத்தெருவில் நின்று கொண்டு திட்ட ஆரம்பித்துவிடுவார். இது கோகுல்ராஜுக்கு சங்கடத்தை தந்தது.. அதனால் பலமுறை மாமா, இப்படியெல்லாம் பேசாதீங்க என்று சொல்லி உள்ளார். ஆனாலும் தாய்மாமன் பேச்சு அவமானத்தையே தந்தது.

advertisement by google

தாய்மாமன்
இப்படித்தான் வழக்கம்போல் தண்ணி அடித்துவிட்டு நடுராத்திரி வந்தார் எத்திராஜ். ரோட்டில் நின்றுகொண்டு, தங்கையை ஆபாசமாகப் பேசி திட்டியதுடன், கூடவே அவரது குடும்பத்தையும் இழுத்து வந்து கேவலப்படுத்தி பேசினார். இதனால் ஆத்திரம் மண்டைக்கேறிய கோகுல்ராஜ், தாய்மாமனை சரமாரி அடித்து, அங்கிருந்து கிளம்பி செல்லும்படி சொன்னார்.

advertisement by google

நிறுத்தவில்லை
ஆனாலும், எவ்வளவு அடி வாங்கினாலும், தாய்மாமன் அங்கிருந்து நகர்ந்து போகவே இல்லை.. கெட்ட வார்த்தைகளால் தங்கையை திட்டுவதையும் நிறுத்தவே இல்லை.. இதனால் பொறுமை இழந்த கோகுல்ராஜ் கீழே கிடந்த கருங்கல்லை எடுத்து எத்திராஜ் முகத்தில் கடுமையாக தாக்கிவிட்டார்.

advertisement by google

கைது
இதில், தாய்மாமன் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.. அங்கேயே துடிதுடித்தும் இறந்துவிட்டார். இதை பார்த்த பொதுமக்கள் பரங்கிமலை போலீசுக்கு தகவல் அளிக்கவும், விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி, கோகுல்ராஜையும் கைது செய்தனர்.

advertisement by google

Related Articles

Back to top button