திருச்சியில் நிருபர் மணிகண்டன்கொலை, அரிசி கடத்தல் தொடர்பாக பேசியதால் விபரீதம்?
திருச்சியில் நிருபர் கொலை.. அரிசி கடத்தல் தொடர்பாக பேசியதால் விபரீதம்*
திருசு்சி தாராநல்லூர் பாரதி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன்(31). இவரது மனைவி பழனியம்மாள் (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் காவலர் பார்வை என்கிற வார இதழிலில் தான் நிருபராக பணியாற்றி வருவதாக கூறிவந்துள்ளார். அதேப்பகுதியில் சேவியர் ரைஸ்மில் என்று ஒன்று உள்ளது. அங்கு ரேஷன் அரிசியை கடத்தி வருவதாக கூறிய மணிகண்டன் இது குறித்து அங்கு பணியாற்றியவர்களிடம் பேசியுள்ளார். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகளை எடுத்து வருவது தொடர்பாக தன்னிடம் போட்டோக்கள் இருப்பதாக கூறிய மணிகண்டன் அது தொடர்பாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக இன்று காலை இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று மாலை மணிகண்டன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ரைஸ்மில்லில் லோடுமேன்களாக பணியாற்றி வரும் ஜான் கிறிஸ்டோபர், அஜீத் மீண்டும் மணிகண்டனிடம் தகறாறு செய்து திடீரென கத்தி மற்றும் அரிவாளால் வெட்டி விட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்படும் போது பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காந்திமார்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.