கர்நாடகாவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் பாஜ., சார்பில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏ., நாகராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதில், அவருக்கும் அவரது மனைவிக்குமான சொத்து மதிப்பு ரூ.1201.5 கோடியாக கணக்கு காட்டியுள்ளார்.
இதனால் நாட்டிலேயே பணக்கார எம்எல்ஏ வேட்பாளரானார்
கர்நாடகாவில் முந்தைய மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி காலத்தில், இரு கட்சிகளை சேர்ந்த 17 அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அந்த தொகுதிகளுக்கு டிச.,5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது
அதில் 15 பேர் பாஜ.,வில் சேர்ந்ததால், அவர்களில் 13 பேர் பாஜ., சார்பில் போட்டியிடுகின்றனர்
இதில், முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த நாகராஜ் என்பவர்,
ஹொஸ்கோதே தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்
அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சொத்து மதிப்பை பார்த்து, அனைவரும் அதிர்ந்து போயினர்.
அதில், நாகராஜ் மற்றும் அவரது மனைவிக்கு உள்ள மொத்த சொத்து மதிப்பு ரூ. 1201.50 கோடி என பதிவிட்டுள்ளார்.
மேலும், அதில் இணைக்கப்பட்ட வங்கி ஆவணங்களின் மூலம், 2018ம் ஆண்டில் போட்டியிடும்போது அவரது சொத்தை விட, 18 மாதங்களில் ரூ.185 கோடி உயர்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது
அதிலும், கடந்த ஆக.,2 முதல் 7 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் அவரது வங்கி கணக்குகளில் ரூ.48 கோடி அதிகரித்துள்ளது