தமிழராய் மாறிய மோடி ஸ்டைலும் பண்ணினார் சீனஅதிபர் முன்னால்?
தைப்பொங்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாடுவது போன்று பட்டு வேட்டி சட்டை, காலில் ராணுவ வீரன் போல் ஷூ
தோலில் பட்டு சரிகை துண்டு என சீன அதிபரை வரவேற்க வந்த மோடி,தமிழர் போன்ற நடைஉடை பாவணையுடன் காணப்பட்டார்
சென்னை நகரில் பட்டு வேட்டி – சட்டை, துண்டுடன் காணப்பட்ட பிரதமருக்கு கோடிக்கணக்கான வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்தன
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வாசகத்தை ஐநாவில் உரத்து பேசி பின்பு நம்ம ஊரு இட்லி, தோசை, சாம்பாரை ரொம்பவே பிடிக்கும் என்று ரசனையுடன் ருசிபட வைத்து விட்டார் உலக தலைவர்களுக்கு . தமிழன்தான் இப்படி இருப்பான் என்று தமிழ்நாட்டு காரர்களுக்கே பாடம் சொல்லி கொடுத்த மாதிரி பண்ணிவிட்டார் மோடி.
தமிழரின் பாரம்பரிய உடையான வெள்ளை வேட்டி சட்டையில் மாமல்லபுரத்தில் வந்து அவர் இறங்கியபோது.. மனதில் புல்லரித்து போகத வாயும் சொல்லாத சொல்லான வாயே இல்லை.. அப்படி ஒரு பக்கா தமிழனாக மாறிக் காட்சி தந்தார் மோடி. அச்சிரிப்படவைக்க கூடிய நபராய் ,நம்ம மோடியா இது.. என்று தான் உலகதமிழர் அத்துனை பேரும் ஆச்சரியப்பட்டு வாயடைத்து போனார்கள் ?
பாட்ஷா படத்தில் ரஜினி வரும் ஸ்டைல் போன்று
பட்டு வேட்டி
சந்தன கலர் பட்டு ஜரிகை அங்கவஸ்த்திரம் தோளில் போட்டுகொண்டு, அடிக்கடி அதை இழுத்து இழுத்து சரி செய்து கொண்டே ஸ்டைலாக சீன அதிபரிடம் பேசி உலகமக்களிடம் மதிப்பெண் வாங்கிகொண்ட மாதிரி தெரியுது.மோடி எப்பொழுதும் அணியும் கோட்-சூட்டும் இல்லை.. கலர் கலர் குர்தாவும் இல்லை.. இப்படியே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு,திருநெல்வேலி ,தூத்துக்குடி மதுரை ,நாகர்கோவில், திருச்சி சென்னைகாரர் போலவே தமிழனாக மாறி விட்டார் பிரதமர் மோடி.
கட் ஷூ
வேட்டிக்கு ஏற்றபடி போட்டு அசல் பாட்ஷாவில் ,ரஜினி ஸ்டைல் போல் மாற்றிவிட்டார். சீன அதிபரிடம் மாமல்லபுரம் சிற்பங்களை பற்றி மோடியே விவரித்து சொல்கிறார். இந்த பல்லவ நாட்டு சிற்பங்களின் சரித்திரங்கள் மோடி இதற்கு முன்பே தெரிந்து வைத்திருக்கக்கூடும் என்றே தெரிகிறது. பிரதமருக்கு இவ்வளவு விஷயம் எப்படி தெரியும் என்பது நமக்கு மிகப்பெரிய வியப்பை தருகிறது.
அர்ஜுனன் தபசு
குறிப்பாக ஒரேகல்லால் ஆன சிற்பங்களை பற்றி நிறைய நேரம் மோடி, அதிபரிடம் விளக்கி கொண்டிருந்தார். அதேபோல, அர்ஜுனன் தபசு சிற்பங்களை பற்றியும் பிரதமர் விலாவரியாக எடுத்து சொன்னார். மாமல்லபுரத்தில் சீன அதிபர் கோட்-சூட்டையெல்லாம் கழற்றி எறிந்துவிட்டு, கேஷூவலான பேன்ட்-சட்டையில் மாறிவிட்டார். அவருடன் வந்தவர்கள், மோடியுடன் வந்தவர்கள் எல்லாருமே கோட்-சூட்டில் இருக்கிறார்கள்.
வித்தியாசம்
நம்ம தல மோடி
அந்த இடத்திலேயே வித்தியாசமாக காணப்பட்டது நம்ம தலைதான்.. அதுவும் பல்லவ நகரில் இரு நாட்டு தலைவர்களை இப்படி எளிமையாக பார்ப்பதே நமக்கு வித்தியாசமாகவும், சந்தோஷமாகவும் நிறைந்து இருக்கிறது. முன்னதாக மாமல்லபுரத்துக்கு காரில் அதிபர் வந்தவுடன், பிரதமர் வரவேற்ற தோறணையை பார்த்தால், ஏதோ உள்ளூர்வாசி வெளியூர்காரரை வரவேற்பது போல அவ்வளவு எளிமையாகவும், யதார்த்தமாகவும் இருந்தது.
இன்று ஒரே நாளில்.. உலகதமிழர்கள் இந்தியர்கள் மற்றும் உலகின் எல்லோர் மனதிலும் நின்றுவிட்டார் மோடி! என்றே சொல்ல வேண்டும்