இந்திய பொருளாதார தேக்கம் எதிரொலி? பணியாளர்களுக்கு சம்பள உயர்வு குறையும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்?
♦பொருளாதார தேக்கம் எதிரொலி: பணியாளர்களுக்கு சம்பள உயர்வு குறையும் என ஆய்வில் தகவல்
?பொருளாதார தேக்க நிலை காரணமாக, நிறுவனங்களின் சம்பள உயர்வு இந்தாண்டில் கணிசமாக குறையும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
?நாட்டில் கடுமையான பொருளாதார தேக்க நிலை காணப்படுகிறது. இந்த தேக்க நிலையால், பல நிறுவனங்களின் சம்பள உயர்வு இந்த ஆண்டில் கணிசமாக குறையும் என்று ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
?20 துறைகளில் 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
?இது தொடர்பான தகவல்கள் வருமாறு: 2020ம் ஆண்டில் பணியாளர்களின் சம்பளம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கணிசமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது.
?2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையின்போது, சம்பள உயர்வு விகிதம் 6 புள்ளி 6 சதவீதமாக குறைந்தது. அது போன்று, நடப்பாண்டில் 9 சதவீதத்துக்குள் இருக்கும் என்று கூறியுள்ளது.
?2001ஆம் ஆண்டில் சம்பள உயர்வு விகிதம் 15 சதவீதமாகவும், 2019 ம் ஆண்டில் 16 சதவீதமாக இருந்தது. வாகன உற்பத்தித் துறை 2018 ல் 10.1 சதவீதத்திலிருந்து 2020ம் ஆண்டில் 8.3 சதவீதமாக மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.