இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் குப்பைகளை கொட்டிச் சென்ற வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு?️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

திருப்பூரில் குடியிருப்புக்கு மத்தியில் குப்பைகளை கொட்டிச் சென்ற வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ராக்கியாபாளையம் அடுத்து விஜிபி கார்டன் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் குடியிருப்புக்கு மத்தியில் கொட்டி செல்வதாக ஏற்கனவே அப்பகுதி பொதுமக்கள் நல்லூர் மண்டல அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
இந்த நிலையில், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து அதே பகுதியில் குப்பைகளை கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் இருப்பதால் இச்செயலை கைவிடவேண்டும் என வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு அப்பகுதி பொதுமக்கள் இன்று குப்பைகளை கொட்ட வந்த வாகனங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நாளைக்குள் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button