திருச்சியில் மாணவர்களை பள்ளிக்கு கொண்டுசெல்லும் ஆட்டோ ஓட்டுநருக்கு 5 வருடம் சிறை?
பாலியல் வழக்கில் ஆட்டோ ஓட்டுநர் உஸ்மான்க்கு 5 ஆண்டு சிறை
திருச்சியில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், ஆட்டோ ஓட்டுநருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரைச் சேர்ந்தவர் உஸ்மான் (25). ஆட்டோ ஓட்டுநரான இவர் அப்பகுதியிலுள்ள பள்ளிக்கு குழந்தைகளை ஆட்டோவில் அழைத்து செல்வது வழக்கம்.
அதன்படி 2017, அக்டோபர் 23- ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பிய 7 வயது சிறுமியை உஸ்மான் பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து சிறுமியின் தாய், கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து உஸ்மானைக் கைது செய்தனர்.
இதுகுறித்த வழக்கு விசாரணை திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஆட்டோ ஓட்டுநர் உஸ்மானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. ஆயிரம் அபராதமும், இதை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி வனிதா திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து உஸ்மான் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google
advertisement by google