t

தூத்துக்குடியில் பயங்கரம்? கள்ளத்தொடர் பால் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கள்ளத்தொடர்பால் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை – தூத்துக்குடியில் பயங்கரம்

advertisement by google

✍தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது

advertisement by google

✍தூத்துக்குடி கே.டி.சி.நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன் மகன் பிரேம்குமார் (வயசு29) ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கௌசல்யா (வயது25). இந்த தம்பதியருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். கௌசல்யாவின் உடன்பிறந்த சகோதரி மகேஸ்வரி. இவரது கணவர் விக்னேஷ்வரன் (வயது30) இவர் பழவியாபாரம் செய்து வருகிறார்.

advertisement by google

✍மகேஸ்வரிக்கும் பிரேம்குமாருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை மகேஸ்வரியின் கணவர் விக்னேஸ்வரன் கண்டித்து வந்துள்ளார். இதையடுத்து இன்று (21.7.2020) இரவு 8 மணியளவில் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மகேஸ்வரியின் வீட்டிற்கு பிரேம்குமார் சென்று வந்துள்ளார். இதையறிந்த விக்னேஸ்வரன் கேடிசி நகரிலுள்ள பிரேம்குமார் வீட்டிற்கு சென்று, அங்கு அவரை வீட்டிற்கு வெளியே வரவழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

advertisement by google

✍இதுகுறித்து தகவலறிந்து சிப்காட் காவல் ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிந்து, தலைமறைவான விக்னேஷ்வரனை தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பால் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button