கழுதை
பார்ப்பதற்கு மிக எளிமையன விலங்கு என்பதனால் கழுதையை நாம் மிக மட்டமானதாக நினைக்கிறோம்.
ஆனால் கழுதை செய்கிற வேலையை மனிதனால் செய்வதற்கு நினைத்து கூட பார்க்க முடியாது. மிக உயரமான பாறைகளிலும் மலைபாதைகளிலும் பொருள்களை சுமந்து கொண்டு கழுதைகள் நடப்பதை பார்த்தவர்கள் நிச்சயம் அதை குறை சொல்ல மாட்டார்கள்.
கழுதையிடம் விஷேசமான குணங்கள் பல உண்டு. கழுதை ஒரு நாளில் முப்பது நிமிடங்கள் தான் உறங்கும். ஓய்வெடுத்து கொள்ளும்.
சாப்பிடுவதற்கு அதை கொடு இதை கொடு என்று அடம்பிடிக்காது. எதை கொடுத்தாலும் சந்தோசமாக சாப்பிடும் கழுதையின் இரத்தத்திலும், பாலிலும் கூட மருத்துவ குணம் இருப்பதாக கூறுகிறார்கள் மனிதனுக்கு அந்தபெருமைஇருக்கிறதா?
இன்னொரு பண்பையும் கழுதையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் அது வேலை இல்லாத நேரத்தில் தாறுமாறாக சுற்றி திரியாது எங்காவது ஒரு மூலையில் அழகாக ஓய்வெடுக்கும் வேலை என்று வந்து விட்டால் நிமிட நேரம் கூட ஓய்வை எதிர்பார்க்காமல் வேலை செய்ய துவங்கி விடும் நாமும் அப்படி இருந்தால் நன்றாகத்தானே இருக்கும்.
உங்களை கழுதை என்று மற்றவர்கள் அழைப்பதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் கிடையாது உங்களை அவர்கள் உழைப்பாளிகள் என்று கூறுவதாக எடுத்து கொள்ளல்லாம்.
அதே வேளை கழுதையிடம் எக்கு தப்பாக வம்புகள் செய்தால் காலால் உதைக்கும் என்பதையும் நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்.✍??