மதுரை செல்லூரில் பாலியல் வன்கொடுமை செய்து மாணவி கொலை – திருமணம் செய்ய மறுத்ததால் கொடூரம்
திருமணம் செய்ய மறுத்த பள்ளி மாணவியை, இருவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர்.
மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரது மகள் சந்தியா. 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சந்தியா உசிலம்பட்டி அருகே ஓணாப்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார். பாட்டி வீட்டிற்கு சென்ற இடத்தில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவத்தில் திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன. இந்த கொலை தொடர்பாக ஓணாப்பட்டியைச் சேர்ந்த மாதவன் என்ற வாலிபரை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தினர். அப்போது, தன்னை திருமணம் செய்து கொள்ள சந்தியா மறுப்பு தெரிவித்ததால் தனது அண்ணன் மதுவுடன் இணைந்து சந்தியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மாதவன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, மாதவனை கைது செய்த போலீசார் அவன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளளனர். மேலும், தப்பி ஓடிய மாதவனின் அண்ணன் மதுவை போலிசார் தேடி வருகின்றனர்.