t

ஓட்டப்பிடாரம் அருகே, மது குடிக்க பணம் தர மறுத்த தாய் அடித்துக் கொலை✍️ மகனை போலீசார் கைது✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஓட்டப்பிடாரம் அருகேதாய் அடித்துக்கொலை; மகன் கைது

advertisement by google

ஓட்டப்பிடாரம்:

advertisement by google

ஓட்டப்பிடாரம் அருகே, மது குடிக்க பணம் தர மறுத்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுெதாடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

advertisement by google

பணம் கேட்டு தகராறு

advertisement by google

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முப்பிலிவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மனைவி கனகராணி (வயது 65). இவரது மகன் சந்தனகுமார் (33). கூலி வேலை பார்த்து வருகிறார். சந்தனகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

advertisement by google

இந்தநிலையில் கடந்த 28-ந் தேதி தோட்டத்தில் கனகராணி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சந்தனகுமார் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் கனகராணி பணம் கொடுக்க மறுத்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

advertisement by google

அடித்துக் கொலை

advertisement by google

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சந்தனகுமார், தாய் என்று பாராமல் கனகராணியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த கனகராணி மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கனகராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகன் கைது

இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து சந்தனகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button