கோவில்பட்டியில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம்
கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட வக்கீல் தெருவில் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், மழை நீரால் நிரம்பி கொசுக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் அருகில் மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிகமாக காணப்படுகிறது. மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சாலையை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட செயலாளர் அழகு முத்து பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நகர செயலாளர் சரோஜா ,மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரம ராஜ், தாலுகா செயலாளர் பாபு, நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன் , காசிபாரதி, விஜயலட்சுமி, ரஞ்சிதம் ,முருகேசன் ஆதிமூலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்