கிரைம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில், அடிக்கடி தகராறு செய்த கணவனை, நண்பர்களுடன் சேர்ந்து கணவனை கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி

advertisement by google

காவேரிப்பட்டணம்,

advertisement by google

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகன் ராம்குமார் (வயது 26). ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் சூளகிரி பகுதியை சேர்ந்த சுஜாதா (23) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

advertisement by google

இந்த தகராறு குறித்து நாகரசம்பட்டி போலீ்ஸ் நிலையத்துக்கு புகார் சென்று போலீசார் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இதற்கிடையே நேற்று காலை ராம்குமார் தலையில் ரத்தக்காயங்களுடனும், ஒயரால் கழுத்து இறுக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

advertisement by google

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ராம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்னர்.

advertisement by google

இதற்கிடையே கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததால் சந்தேகத்தின்பேரில் போலீசார், சுஜாதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

advertisement by google

அதாவது திருமணமானது முதல் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுஜாதா தனது கணவன் மீது கோபத்தில் இருந்துள்ளார். போலீஸ் நிலையம் வரை தகராறு விவகாரம் சென்றதால் ஆத்திரமடைந்த அவர் கணவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக சூளகிரியை பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான கணேசன் (19), மோகன் (18) ஆகியோரின் உதவியை நாடினார். அவர்களும் கொலை செய்ய சம்மதம் தெரிவித்தனர்.

advertisement by google

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ராம்குமார் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். அப்போது கணேசன், மோகன் ஆகியோர் சுஜாதா வீட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தூங்கி கொண்டிருந்த ராம்குமாரின் கழுத்தை ஒயரால் இறுக்கினர். மேலும் தலையில் பயங்கரமாக தாக்கினர். இதில் ராம்குமார் ரத்தக்காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து கணேசன், மோகன் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

advertisement by google

பின்னர் நேற்று காலை கொலையை மறைப்பதற்காக சுஜாதா தனது கணவன் வாயில் ரத்தகாயத்துடன் இறந்து கிடப்பதாக அழுது நாடகமாடி உள்ளார். எனினும் அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சுஜாதா, கணேசன், மோகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button