குவைத்தின் சல்வா பகுதியில் இந்திய ஓட்டுநர் ஒருவர் தற்கொலை என்ற தகவல் வெளியாகி பரபரப்பு?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
குவைத்தின் சல்வா பகுதியில் இந்திய ஓட்டுநர் ஒருவர் தற்கொலை என்ற தகவல் வெளியாகியுள்ளது
குவைத்தின் சல்வா பகுதியில் உள்ள குவைத்தி வீட்டில் வேலை செய்து வந்த இந்திய ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்று பிரபல தினசரி நாளிதழ் இன்று புதன்கிழமை(அக்டோபர்-21) செய்தி வெளியிட்டுள்ளது. இவர் 1988 யில் பிறந்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது, மேலும் கூடுதல் தகவல் எதுவும் உடனடியாக தெரியவில்லை
ஒரு குவைத் பெண்மணி தனது வீட்டு ஓட்டுநர் அவருடைய அறைக்குள் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியது கண்டு உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்
இதையடுத்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதிகாரிகள் நடத்திய தடயவியல் ஆதாரங்கள் அடிப்படையில் முதல்கட்டமாக தற்கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் என்று அந்த பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது
இதுபோல் குவைத்தின் அஹமதி பகுதிகளில் 1969 யில் பிறந்த வங்காளதேச நாட்டவர் ஒருவர் தற்கொலை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்