தமிழகம்

இந்தியா முழுவதும் சோர்வின்றி உற்சாகமாக நடைபயணம் செய்த ராகுல், தமிழகம் மட்டும் அண்ணாமலை நடைபயணம் டிச.16-க்கு தள்ளிவைப்பு

advertisement by google

ஊழலுக்கு எதிராக ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணத்தை, ராமேசுவரத்தில் ஜூலை 28-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கியும், திமுக அரசுக்கு எதிராகவும் அண்ணாமலை பேசி வருகிறார்.

advertisement by google

இந்நிலையில், வடகிழக்குப் பருவ மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனது நடைபயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்த அண்ணாமலை, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறார்.

advertisement by google

இந்நிலையில், தனது நடைபயணத்தை டிச.16-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். அன்றைய தினம் திட்டமிட்டப்படி செஞ்சியில் இருந்து தொடங்கலாமா என்பது குறித்து பாஜக பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button