அரைகுறை ஆடையுடன்.. சசிகலா புஷ்பா வீட்டில் படுத்திருந்த “மர்ம ஆண்”.. சிக்கிய 2 பேர்.. வீடியோ ஆதாரம்?!*
முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் ஆண் ஒருவர் படுத்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சசிகலா புஷ்பாவின் இரண்டாவது கணவர் ராமசாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்பி, மேயர் சசிகலா புஷ்பா தற்போது பாஜகவில் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது கணவனை பிரிந்து இரண்டாவதாக ராமசாமி என்ற வழக்கறிஞரை திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் சசிகலா புஷ்பா தனது முதல் கணவரை முறைப்படி பிரியவில்லை. அதேபோல் வழக்கறிஞர் ராமசாமியும் தனது மனைவியை சட்டப்படி பிரியவில்லை.
இந்த நிலையில் சசிகலா புஷ்பாவிற்கு, ராமசாமிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சண்டை நிகழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா, ராமசாமி இருவரும் அண்ணா நகரில் இருக்கும் ராமசாமிக்கு சொந்தமான வீடு ஒன்றில் வசித்து வந்தார். இதில் சசிகலா புஷ்பாவை பார்க்க சில ஆண்கள் அவ்வப்போது வந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சசிகலா புஷ்பா ராமசாமிக்கு இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக சண்டை முற்றியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் சசிகலா புஷ்பா தனது வீட்டில் போதையில் படுத்து கிடந்ததாக ராமசாமி புகார் அளித்துள்ளார். அதோடு வீடு முழுக்க பல இடங்களில் மது பாட்டில் கிடந்ததாகவும், இன்னொரு அறையில் பெண் ஒருவர் போதையில் இருந்ததாகவும், இன்னொரு ஆண் அரைகுறை ஆடையுடன் கிடந்ததாகவும் ராமசாமி குற்றச்சாட்டு வந்தது . தான் பணிக்கு சென்று திரும்பிய போது வீட்டில் சசிகலா இப்படி படுத்து கிடந்ததாகவும், வீடு முழுக்க ஆணுறைகள் கிடைத்ததாகவும் ராமசாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை போலீசிடம் புகார் அளித்த ராமசாமி, எனது வீட்டை வைத்து சசிகலா புஷ்பா பாலியல் தொழில் செய்து வருகிறார். வீட்டிற்கு ஆண்கள் பலர் வந்து செல்கிறார்கள். வீடு முழுக்க மது பாட்டில்கள், ஆணுறைகள் இருக்கின்றன. இதை பற்றி கேட்டதற்கு சசிகலா புஷ்பா என்னை தாக்கினார். என் மீது சசிகலா புஷ்பா கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பாவிற்கு எதிராக ராமசாமி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து சசிகலா புஷ்பா மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் அந்த வீட்டில் இருந்த அமுதா என்று பெண்ணுக்கு எதிராகவும், வீட்டில் படுத்திருந்த ஆண் தஞ்சாவூர் ராஜா என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இவர்தான் வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தன்னிடம் இதை பற்றிய வீடியோ ஒன்று இருப்பதாகவும் ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
ராமசாமி போலீசில் அளித்த புகாரில், என்னுடைய வீட்டில் மது பாட்டில் கிடந்தது, ஆண் உறை இருந்தது. ஆண் ஒருவர் அரைகுறை ஆடையுடன் கிடந்தார். அப்போது அதை நான் வீடியோ எடுத்தேன். ஆனால் சசிகலா புஷ்பா என்னை தாக்கி வீடியோவை டெலிட் செய்துவிட்டார். போனில் இருக்கும் வீடியோ ஆதாரத்தை போலீசார் மீட்க வேண்டும். டெலிட் செய்யப்பட்ட வீடியோவை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.