நெய்வேலியில் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து ,கல்வீச்சில் ஈடுபட்ட பாமகவினர் – போலீஸ்சார் துப்பாக்கிச்சூடு
நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போலீசார் மீது பாமகவினர் தாக்குதல் மேற்கொண்டனர்.
இதையடுத்து பாமகவினர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்து வருவதால் அங்கு கடும் பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை அடக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
என்.எல்.சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று கடலூரில் நடந்த போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து பாமக தொண்டர்கள் சிலர் வஜ்ரா வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.
போராட்டத்தில் பாமகவினர் கல்வீச்சு, போலீஸ் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்துவது என வன்முறையில் ஈடுபட்டனர்.
நெய்வேலி என்.எல்.சி அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் போலீசார் சிலர் காயமடைந்துள்ளனர். ஒரு போலீஸின் மண்டை உடைந்துள்ளது.
தண்ணீர் பீய்ச்சியடித்து, தடியடி நடத்தி அவர்களை போலீசார் கலைத்து வருவதால், அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.