விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இன்றும், நாளையும் தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு ,விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்,தொடர்பு எண்கள் உள்ளே >
விருதுநகர், ஆக.11: விருதுநகரில் இன்றும், நாளையும் தேனீ வளர்ப்பு குறித்து கருத்தரங்கு நடைபெறுகிறது. விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்ட தகவல்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய தேனீ மற்றும் தேன் இயக்கத்தின் மூலம் இன்று, நாளை மாவட்ட அளவிலான தேனீ வளர்ப்பு குறித்த கருத்தரங்கு நடைபெற உள்ளது. தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் தேனீவளர்ப்பில் ஆர்வம் உள்ள தனிநபர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு ஆதார் நகல், புகைப்படம் சமர்ப்பித்து கருத்தரங்கில் பங்கேற்கலாம். தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் செல்போன் எண்கள்: திருவில்லிபுத்தூர் 7845199853, சிவகாசி 9080719043, வெம்பக்கோட்டை 9489375653, அருப்புக்கோட்டை 9566760917, சாத்தூர் 9489827503, நரிக்குடி 7639053454, காரியாபட்டி 9566760917, ராஜபாளைம் 9787868216, வத்திராயிருப்பு 9445006999, எம்.ரெட்டியபட்டி 9500986032, விருதுநகர் 7010971163 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.