காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்ததால், முன்விரோதம் காரணமாக பசு மாட்டை சுட்டுக்கொன்றவர் கைது, ஏர்காடு மாராமங்கலம் கிராமத்தில் அதிர்ச்சி✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
ஏற்காடு:ஏற்காடில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாரமங்கலம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி வரதராஜன் (வயது 42) என்பவருக்கும், வடமன் (45) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடமனின் மகள், அதே பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தாகவும் அவர்களுக்கு வரதராஜன் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்தே இருவருக்கும் தகராறு நிலவியது.இந்நிலையில் கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வடமன் தனது தோட்டத்தில் திருட்டுத்தனமாக கொக்கி போட்டு மின் இணைப்பு திருடியதாக அவருக்கு ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதற்கும் வரதராஜன் தான் காரணம் என ஆத்திரம் அடைந்த வடமன் தனது வீட்டில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வரதராஜன் வீட்டிற்கு சென்று தேடியதில் வரதராஜன் அங்கு இல்லாததால் ஆத்திரமடைந்த வடமன் அங்கு இருந்த பசுமாட்டை சுட்டு கொன்றுவிட்டு தலை மறைவானார்.இந்நிலையில் வரதராஜன் மகள் விஷ்ணு பிரியா அளித்த புகாரில் பேரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக சுற்றி திரிந்த வடமன் ஏற்காட்டில் இருந்து தப்பி செல்வதற்காக கோட்டச்சேடு பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஏற்காடு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.