கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம் எல்கையில் ,இராதாபுரம் தாலுகா பழவூர் சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் அமைந்து ,சூராணிகரையில் தை அமாவாசையை, முன்னிட்டு மரண குங்கும திருவிழா✍️ வெகுவிமர்சனமான மாபெரும் திருவிழா✍️ முழுவிவரம்✍️ விண்மீன்நியூஸ்
சூராணிகரையில் தை அமாவாசையை முன்னிட்டு மரண குங்கும திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டம் எல்கையில் இராதாபுரம் தாலுகா பழவுர் சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் அமைந்து உள்ள சூராணிகரை ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று மரண குங்கும திருவிழா நடைபெற்றது.
தீய சக்திகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் இடமாக திகழும்
சூராணிகரையில் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும், காண்பவர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அக்காலத்தில் மக்களை துன்புறுத்திய மகிஷாசுரனை வதம் செய்து அவனது உதிரத்தை தன்மேல் விட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டாள் நாக காளி அம்மன் அதனைக் கூறும் வகையில் இப்பொழுதும் சூராணி கரையில் இவ்விழாவானது பக்தகோடிகள் முன்னிலையில் செண்டை மேளங்கள் முழங்க பஜனை, தாலாட்டு பாடி கொதிக்கும் குங்குமத்தில் ஆவேசத் துடனும், ஆக்ரோஷத்துடன் தன்னை நாடி வரும் மக்களின் குறைகளை தீர்த்து அருள்பாலித்து வருகிறாள் 2 மாவட்ட காவல் தெய்வமான சூராணிகரை நாககன்னி கோவிலில் சுற்றுவட்டார 18 பட்டி கிராம மக்கள் உட்பட தமிழகம் மற்றும் கேரளா பக்தர்களும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து தங்களது நோய்நொடிகள், கடன் பிரச்சினை, குழந்தை பாக்கியம், திருமண தடை, தீய சக்திகளில் இருந்து விடுபட அம்மனிடம் அருள் வாக்கு பெற்றுச் சென்றனர். விழா முடிவில் அனைவருக்கும், அருள் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், அம்மனின் அருள் வாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்வது இக்கோயிலின் சிறப்பு அம்சம்.