இளம்பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து சாக்கடையில் வீச்சு✍️திருப்பூரில் பயங்கரம் ✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்
திருப்பூரில் பயங்கரம் இளம்பெண்ணை கொன்று உடலை சூட்கேசில் அடைத்து சாக்கடையில் வீச்சு*
திருப்பூர்: திருப்பூரில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு, சூட்கேசில் உடலை அடைத்து சாக்கடை கால்வாயில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருப்பூர் தாராபுரம் ரோடு எம்.புதுப்பாளையம் நீலிகாடு பகுதியில் சாக்கடை கால்வாயில் நேற்று காலை சூட்கேஸ் ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்தனர். அதில் இருந்து துர்நாற்றம் வீசவே நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து சாக்கடையில் கிடந்த சூட்கேஸை மீட்டனர். அதனை திறந்து பார்த்தபோது, அதில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த சூட்கேசில் பதிவாகியிருந்த கை ரேகைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பெண் யார்? கொலை செய்தது யார்? என 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நல்லூர் பகுதியில் மாயமானவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இளம்பெண் கொலை செய்யப்பட்டு உடல் சூட்கேசில் அடைக்கப்பட்டு, சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.