கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கத்தில் இருபத்தி எட்டாவது ஆண்டுவிழா? கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என் தளவாய் சுந்தரம் சிறப்புரை?உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா வாழ்த்துரை✍️முழுவிவரம்? -விண்மீன் நியூஸ்
அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கத்தின் 28-வது ஆண்டுவிழாவில் காவல் உதவி ஆய்வாளர் ஜேசி மேனகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், சைபர் கிரைம் குற்றம், அனைத்து பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் ஊர் முன்னேற்ற சங்கத்தில் இருபத்தி எட்டாவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சங்கம் சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கி கௌரவித்தார். மேலும் அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெசி மேனகா கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பெண்கள் வன்கொடுமைச் சட்டம், சைபர் கிரைம் குற்றங்கள், குற்றங்களைத் தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார். அஞ்சுகிராமம் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் காலை முதல் மாலை வரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள், ஓவிய போட்டி வினாடி-வினா போட்டி, பொருட்கள் பெயர் பார்த்து எழுதுதல் போட்டி, நடனப் போட்டி, பாட்டு போட்டி, மாறுவேட போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அடுத்த வாரம் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப் படுகிறார்கள். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் சங்கம் சார்பில் மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.