இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

திருமழிசையில் ஹோட்டல் உரிமையாளரை வெட்டிய சம்பவத்தை கண்டித்து நாடார் சங்கங்களின் கூட்டமைப்பில்சார்பில் தலைவர் மின்னல் ஸ்டீபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்?விண்மீன்நியூஸ்✍️

advertisement by google

திருமழிசையில் ஹோட்டல் உரிமையாளரை வெட்டிய சம்பவத்தை கண்டித்து நாடார் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், பிப்.11-
திருவள்ளூர் மாவட்டம்
பூந்தமல்லியை அடுத்த தி௫மழிசை நாட்டாமை ஹோட்டல் உரிமையாளர் மகாராஜா நாடார் கடந்த 6ம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டப்பட்டு பூந்தமல்லி சவீதா ம௫த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
நாடார் வியாபாரிகளின் கொலைக்கு காரணமான உண்மை குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை பெற்று தர கோரியும் , நாடார் சமுதாய வியாபாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க கோரியும் நேற்று
பூந்தமல்லியை அடுத்த தி௫மழிசை பகுதியில் நாட்டாமை ஹோட்டல் முன்பாக நாடார் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மின்னல் ஸ்டீபன் நாடார் தலைமை தாங்கினார்.தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார், நாடார் மகாஜன சங்கம் தலைவர் கார்த்திகேயன் , பூந்தமல்லி நாடார் சங்க தலைவர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் புழல் தர்மராஜ் நாடார் , தி௫மழிசை நாடார் சங்க தலைவர் அய்யாதுரை நாடார் ,போ௫ர் நாடார் சங்க தலைவர் ஆனந்தராஜ் நாடார் , காமராஜர் நாடார் மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் பூமிநாதன்,பாண்டிய நாடார் பேரவை தலைவர் க௫க்குவேல் , தமிழ்நாடு நாடார் பேரவை நிர்வாகி ராஜா கனி நாடார் மற்றும் 300 மேற்ப்பட்ட நாடார் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button