கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி✍️முழுவிவரம்✍️விண்மீன் நியூஸ்
கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது.
கொரனோ வைரஸ் கொடிய நோயிலிருந்து மக்கள் விடுபட வேண்டியும், நோய் நொடிகள் இன்றி அனைத்து செல்வங்களுடன் மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டியும் கோவில்பட்டி ஸ்ரீ ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் வீரவாஞ்சி நகரில் உள்ள சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரேஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் அசோக் தலைமை வகித்தார். தொழிலதிபர்கள் தனபால், துரை, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சீனிவாசன், செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் நடராஜன், முருகன், பால முருகன், மாரிமுத்து, தங்கராஜ், சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.