t

ஜோதிடர் கூறியதை நம்பி மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை✍️ கோவை அருகே பரிதாபம்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ஜோதிடர் கூறியதை நம்பி மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை: கோவை அருகே பரிதாபம்

advertisement by google

பெ.நா.பாளையம்,: கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையம் ஜல்லிகாட்டை சேர்ந்தவர் தனலட்சுமி (58). இவரது கணவர் 11 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் சசிக்குமார் (32), மனைவியை பிரிந்து சரவணம்பட்டியில் தனியாக வசிக்கிறார். மகள் சுகன்யா (30) உடல் நிலை பாதிக்கப்பட்டவர்.

advertisement by google

நேற்று முன்தினம் சசிகுமாரிடம் செல்போனில் பேசிய தனலட்சுமி, ‘‘நான் இன்று ஜோதிடம் பார்த்தேன். எனக்கு நேரம் சரி இல்லாததால் கை, கால் வராமல் போய்விடும் என்று ஜோதிடர் சொன்னார். நான் படுத்துவிட்டால் தங்கையை கவனிக்க ஆள் இல்லாமல் போய்விடும்’’ என்று கூறி அழுதுள்ளார். அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

advertisement by google

நேற்று காலை அவர் தாய்க்கு போன் செய்தபோது எடுக்காததால் எதிர் வீட்டில் வசிப்பவருக்கு போன் செய்து பார்க்கும்படி கூறியுள்ளார். அவர் சென்று பார்த்தபோது, தனலட்சுமி தூக்கில் சடலமாக தொங்குவதை தெரிந்து தகவல் கொடுத்தார். உடனடியாக சசிகுமார் வந்து பார்த்தபோது சுகன்யாவும் இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சுகன்யாவுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தனலட்சுமி தற்கொலை செய்தது தெரியவந்தது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button