சிவகாசியில் அஇஅதிமுக உட்கட்சி தேர்தல், திருத்தங்கல், ரிசர்வ்லயன், நாரணாபுரம், தேவர்குளம் உட்பட 6 இடங்களில் தேர்தல்✍️ நாரணபுரம் தொகுதியில் சிவகாசி அதிமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் V.ஆரோக்கியராஜ் தலைமையில் ஏற்பாடு ,ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்பு✍️முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தேர்தல் பொறுப்பாளர் விஜயபாஸ்கர் நேரில் பார்வை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
சிவகாசியில் அதிமுக உட்கட்சி தேர்தல்
சிவகாசி, டிச.15: விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் திருத்தங்கல், ரிசர்வ்லயன், நாரணாபுரம், தேவர்குளம் உட்பட 6 இடங்களில் தேர்தல் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் 24 இடங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் 4 ஒன்றிய பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் கிளை கழக செயலாளர் பதவிக்கும், நகர பகுதிகளில் உள்ள 165 வார்டு செயலாளர் பதவிக்கும் பேரூர் பகுதிகளில் உள்ள 115 பேரூர் கழக செயலாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் நடக்கும் பகுதிகளை முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, தேர்தல் பொறுப்பாளர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டனர். 2 நாட்களாக நடைபெற்ற தேர்தலில் பேர்ட்டியிட விருப்பம் தெரிவித்து விருப்ப மனுக்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மூலம் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.