கோவில்பட்டியில் பசும்பொன்நகரில் மிகவும் ஆபத்தான நிலையில் மிகவும் பழுதடைந்த பாலம் ,சாலையினாலும், அந்த சாலையில் தேங்கியுள்ள மழைநீரினாலும் பொதுமக்கள் அவதி✍️மழைநீர் தேங்கியதால் டெங்கு பரவும் அபாயம்✍️உடைந்து போன பாலத்தினால் மாணவர்களும், பொதுமக்களும் அச்சம்✍️ உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ் செய்தி மற்றும் கானொளி காட்சி✍️
*கோவில்பட்டியில் பசும்பொன்நகரில் ஆபத்தான நிலையில் மிகவும் பழுதடைந்த பாலம் ,சாலையினாலும், அந்த சாலையில் தேங்கியுள்ள மழைநீரினாலும் பொதுமக்கள் அவதி
கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை அடுத்த,
பசும்பொன்நகரில் உடைந்து போன பாலம் ,குண்டும் குழியுமான சாலை மற்றும் மழைநீர் தேக்கம்:
கோவில்பட்டி பசும்பொன்நகரில் ஆபத்தான நிலையில் உடைந்துபோன பாலம் மற்றும் குண்டும் குழியுமான சாலை, மழையினால் சேதமடைந்து குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையிலுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குட்டை போல காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் மற்றும் பாலத்தை கடந்து செல்லும் மாணவர்கள் பொது மக்கள்,வாகனங்களில் செல்வோர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் மழைநீர் அதிகமாக தேங்கியுள்ளதால் டெங்கு பரவும் ஆபாயத்தில் பொதுமக்கள் உள்ளனர், உடனடியாக நடவடிக்கை எடுக்குமா? மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும்?