தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி உட்பட ,37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்✍️அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா அதிரடி உத்தரவு✍️முழுவிவரம் – -விண்மீன்நியூஸ்
37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்!
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. இந்த நிலையில் செம்படம்பர் மாதம் முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் முதன்மைக் கல்வி அலுவலராக ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு முதன்மைக் கல்வி அலுவலராக எம்.இராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களை இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.