t

குடும்பத் தகராறு காரணமாக கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து மனைவி படுகொலை✍️ பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய போதை கணவன் கைது✍️மாமல்லபுரம் பகீர்✍️முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

மாமல்லபுரம் அருகே குடும்பத் தகராறு காரணமாக கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து மனைவி படுகொலை: பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய போதை கணவன் கைது

advertisement by google

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே குடும்ப தகராறு காரணமாக கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து மனைவியை கொலை செய்துவிட்டு பூச்சி, பாம்பு கடித்து இறந்ததாக நாடகமாடிய போதை கணவனை போலீசார் கைது செய்தனர். மாமல்லபுரம் அடுத்த பையனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ரவிக்குமார் டெய்லர் (40). இவரது மனைவி ஆனந்தி (31), பையனூரில் உள்ள தனியார் கல்லூரி கேண்டீனில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (16), என்ற மகளும், தமிழ்ச்செல்வன் (14) என்ற மகனும் உள்ளனர். ஆனந்தி, ரவிக்குமாரின் அக்கா மகள் ஆவார். இருவரும் பையனூரை சேர்ந்தவர்கள்.

advertisement by google

இந்நிலையில், ரவிக்குமார் தினமும் குடித்துவிட்டு, அவரது மனைவி ஆனந்தியிடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

advertisement by google

அதேப்போல், நேற்று முன்தினம் இரவு குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் தகராறு செய்து, அடித்து உதைத்துள்ளார். அப்போது, இவர்களது மகன் தமிழ்ச்செல்வன் தந்தையை தட்டிக் கேட்டு கண்டித்துள்ளார். பின்னர், இருவரும் சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அனைவரும் படுத்து உறங்கி விட்டனர். நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்த ரவிக்குமார் அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம்ப்பை எடுத்து ஆனந்தியின் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ஆனந்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

advertisement by google

மனைவி இறந்ததை தெரிந்து கொண்ட கொலையாளி ரவிக்குமார் விடிந்ததும் தனது மனைவியின் நெற்றி, மூக்கு உள்ளிட்ட இடங்களில் பூச்சி மற்றும் பாம்பு கடித்து இறந்து விட்டதாக அருகில் உள்ள உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து, பக்கத்து தெருவில் உள்ள ஆனந்தியின் தாய் தேவகிக்கு மகள் இறந்த தகவல் தெரிந்தது. அங்கு, வந்த அவர் தனது மகள் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து நடுத்தெருவில் தரையில் அழுது புரண்ட சம்பவம் பார்ப்பவர் கண்களில் கண்ணீர் வரவழைத்தது. இதுகுறித்து, தகவலறிந்த மாமல்லபுரம் டி.எஸ்.பி., குணசேகரன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றபோது ரவிக்குமார் நான் தான் எனது மனைவியை அடித்து கொலை செய்தேன் என்று போலீசார் முன்னிலையில் ஒப்புக் கொண்டுள்ளார்.

advertisement by google

போலீசார், இறந்த ஆனந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலையாளி ரவிக்குமாரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று கொலைக்காண காரணம் குறித்து மாமல்லபுரம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாமல்லபுரம் அடுத்த பையனூரில் மனைவியை கிரிக்கெட் ஸ்டெம்ப்பால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

advertisement by google

இது குறித்து, இறந்துபோன ஆனந்தியின் தாய் தேவகி கூறுகையில், ‘எனது மகள் ஆனந்தியை, ரவிக்குமார் பல தடவை அடித்து துன்புறுத்தி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட ஆனந்தியை அடித்து துன்புறுத்தி, கத்தரி கோளால் குத்தி உள்ளார். தனது, தம்பி தான் என்று எல்லாம் போக, போக சரி ஆகிவிடும் என நாங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டோம். அதன் விளைவு தான் தற்போது என் மகள் இறக்க காரணமாகி விட்டது’ என்று கூறி கதறி அழுதார்.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button