கோவில்பட்டியில் புதிய பாலம் ஜூலை மாதம் திறப்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கோவில்பட்டியில் புதிய பாலம் ஜூலை மாதம் திறப்பு
கோவில்பட்டி:
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து ெரயில் நிலைய மேம்பாலம் வரை ரூ.7 கோடி செலவில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஓடை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படாததால், இடையில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் பாலம் அமைக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதால் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் ரூ.25 லட்சம் செலவில் பாலம் அமைக்கும் பணி கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு பாலம் வேலைகள் துரிதமாக நடத்தப்பட்டு கான்கிரீட் போடும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இதனால் அண்ணா பஸ் நிலையம், இளையரசனேந்தல் ரோடு வழியாக வருபவர்கள் கிருஷ்ணன் கோவில் ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக மெயின் ரோடு செல்வதற்கு பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதை திறக்கப் பட்டது. இதனால் கோவில்பட்டி நகரில் போக்குவரத்து நெருக்கடி சற்று குறைந்துள்ளது. கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலம் போக்குவரத்துக்கு அடுத்த மாதம் (ஜூலை) முதல் வாரத்தில் திறக்கப் படும் என்று நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ தெரிவித்தார்.