வசதி படைத்த பல திருமணம் ஆகாத ஆண்களை காதலிப்பதாக கூறி திருமணம் செய்து, வீட்டில் பூட்டி வைத்து அடி உதை✍️அடிவாங்கிய நாலாவது கணவர் புகார்✍️ பெண் போலீஸ் திருமணராணி கைது✍️தெலுங்கானா வில் திகில் அதிர்ச்சி✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கல்யாணம் பல, குழந்தை… ப்ளே கேர்ளான பெண் போலீஸ் கைது..!
வசதி படைத்த ஆண்கள் திருமணமாகாமல் இவரது கண்ணனின் பட்டால் பேசி பழகி பின்னர் காதலிப்பதாக கூறி விடுவதும், திருமணம் செய்துகொண்டு தனது ஆட்டத்தை தொடங்குவதும் சந்தியா ராணியின் வழக்கம்
திருமண ராணி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஆயுத படை தலைமையகத்தில் போலீஸ் கான்ஸ்டேபிளாக பணியாற்றி வருபவர் சந்தியா ராணி. அண்மையில் இவருக்கும் சரண் தேஜா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், சரண் தேஜாவை சந்தியா ராணி வீட்டுக்குள் அடைத்து வந்து கொடுமை படுத்துவதாக ஷம்ஷாபாத் டிஜிபிக்கு வாட்சப் மூலம் சரண் தேஜா புகார் அளித்தார்.
தனிமையில் இருக்கும் ஆண்களுக்கு வலை
அந்த புகாரில், ”ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் சந்தியா ராணியும், நானும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து கொண்டோம். இருவரும் நட்பாக பேசி வந்தோம். அப்போது என்னை சந்தியா ராணி காதலிப்பதாக கூறினார். நானும் காதலை ஏற்று கொண்டேன். சில நாட்களுக்கு பின்னர்தான் சந்தியா ராணியின் சூழ்ச்சிகள் தெரிய வந்தது. அவருக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணம் நடந்துள்ளது. இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
ஒருவர் இறந்தே போன துயரம்
வசதி படைத்த வாலிபர்களை காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துகொள்ளும் சந்தியா ராணி திருமணத்துக்கு பின்னர் அவர்களை சித்திரவதை செய்து வந்துள்ளார். அதனால், இரண்டு கணவர்கள் அவரை விவாகரத்து செய்துள்ளனர். ஒருவர் மட்டும் சந்தியா ராணியின் மிரட்டலுக்கு பயந்து தற்கொலை செய்துள்ளார். இதனால் சந்தியாவை திருமணம் செய்துகொள்ள நான் மறுத்துவிட்டேன். ஆனால், தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் என்னுடன் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை வெளியிடப்போவதாகவும், தன் மீது வழக்கு போடுவதாகவும் மிரட்டி என்னை திருமணம் செய்துகொண்டார்.
மிரட்டல்
இப்போது, என்னை அவரது மதத்திற்கு மாற சொல்லியும், வேலையை விட்டுவிட சொல்லியும் துன்புறுத்துகிறார். என்னை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்கிறார் என்று சரண் தேஜா அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
சிக்கிய ராணி
இதுகுறித்து உண்மை தன்மையை உறுதி செய்துகொண்ட ஷம்ஷாபாத் போலீசார் சந்தியா ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகாமல் தனிமையில் வசிக்கும் வசதி படைத்த இளைஞர்களை காதல் வலையில் வீழ்த்தி திருமண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண் போலீசின் செயல் ஹைதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.