சானிடைசரை பயன்படுத்தி மதுபானம்✍️எக்ஸ்டரா பவுடரால் இனித்த போலி மதுபானம்.. குடிமகனின் புலம்பலால் கூண்டோடு சிக்கிய கோஷ்டி✍️மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானத்தை போலவே பாட்டில்கள்,ஸ்டிக்கர்கள்✍️ அதிர்ச்சியில் காவல்துறை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
எக்ஸ்டரா பவுடரால் இனித்த போலி மதுபானம்.. குடிமகனின் புலம்பலால் கூண்டோடு சிக்கிய கோஷ்டி.!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள இராமநாதன்குப்பம் பகுதியில் அறைபோதையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடித்த சரக்கு போதையை குறைந்த அளவே தந்தது என்றும், சரக்கு இனிப்பு போல சுவையாக இருந்ததாகவும் புலம்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், குடிமகன் இனிப்பு சரக்கு வாங்கியது எங்கு? என்று கேட்டறிந்த நிலையில், உத்திராபதி (வயது 33) என்பவரின் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், சானிடைசரை பயன்படுத்தி போலியான மதுபானம் கண்டறிந்தது தெரியவந்துள்ளது.
மேலும், மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் ஆல்கஹால் கலவையும் கண்டறியப்பட்ட நிலையில், மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானத்தை போலவே பாட்டில்கள் மற்றும் அதற்கான ஸ்டிக்கர்களும் இருந்துள்ளது.
உத்திராபதியின் வீட்டில் மொத்தமாக 400 லிட்டர் சானிடைசர், 2500 மதுபாட்டில்கள், போலியான ஸ்டிக்கர்கள், மதுபானம் தயாரிக்கும் உதிரி பாகங்களும் கண்டறியப்பட்டது. விசாரணையில், முன்னதாகவே போலியான மதுபானம் தயார் செய்யும் நிறுவனத்தில் உத்திராபதி பணியாற்றி வந்த நிலையில், அதன் அடிப்படையில் இங்கும் தொழில் தொடங்கப்பட்டுள்ளது.
இவர் மதுபானம் தயார் செய்ய வைத்திருந்த கலவையில், மதுபானத்திற்குரிய நிறத்தை தரும் கலவை சற்று அதிகரித்து அது இனிப்பு சுவையை வழங்கியது அம்பலமானது. போலியான மதுபானத்தை பலரும் வாங்கி சென்ற நிலையில், அதனை குடித்தவர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனை மற்றும் உயிரிழப்பு போன்றவை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.