அமெரிக்காவில் ஒரே ஆண்டில்10ஆயிரம் இந்தியர்கள் கைதாம்?
♦அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 10 ஆயிரம் இந்தியர்கள் கைது
?அமெரிக்காவில் ஒரே ஆண்டில் சுமார் பத்தாயிரம் கைது செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு அரசு வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
?அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் பணியை அந்நாட்டின் அமலாக்கத்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கின்றன.
?அந்த நடவடிக்கையில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கானோர் கைதாகியுள்ளனர். இதில் மிக அதிக எண்ணிக்கையில் இந்தியர்களும் உள்ளனர்.
?2015ஆம் ஆண்டு முதல் இவ்வாறு கைதாகும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்துவந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் 3,532 பேரும் 2016ஆம் ஆண்டில் 3,913 பேரும் 2017ஆம் ஆண்டு 5322 பேரும் 2018ஆம் ஆண்டு 9,811 பேரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
?2018ஆம் ஆண்டில் கைதானவர்களில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டவர்கள் எண்ணிக்கை 831. இந்த எண்ணிக்கை 2015ஆம் ஆண்டில் 296 ஆகவும் 2016ஆம் ஆண்டில் 387 ஆகவும் 2017ஆம் ஆண்டு 474 ஆகவும் கூடியிருக்கிறது.
?நிர்வாக ரீதியாக கைது செய்யப்பட்ட இந்தியர்கள் எண்ணிக்கை 2015ல் 317 ஆக இருந்தது. இது 2016ல் 390, 2017ல் 536 மற்றும் 2018ல் 620 என அதிகரித்திருக்கிறது.
?2015ஆண்டில் அமெரிக்க அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்டவர்கள் 1,12,870 பேர். இதுவே 2018ஆம் ஆண்டில் 1,51,497 ஆக உயர்ந்துள்ளது.
?2016 முதல் 2018 வரையான காலத்தில் கைது செய்யப்படும் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் திருநங்கைகளின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்றும் 2017-18ல் உடல் ஊனமுற்றவர்களை கைது செய்வது அதிகமாகியிருக்கிறது என்றும் அமெரிக்க அரசின் அறிக்கையின் மூலம் தெரியவருகிறது.