சாலை விதிமீறல்களுக்கு அதிக அபராதத் தொகை-கட்கரி விளக்கம்
மோட்டார் வாகனச் சட்டத்தின் படி உயர்த்தப்பட்டுள்ள அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துளளார்.
டெல்லியில் செய்தியாளர்கள் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுவதாக தெரிவித்து, அமைச்சரின் விளக்கத்தை கேட்டனர்.
அதற்கு பதிலளித்த கட்கரி அபராதம் அதிகமாக இருந்த போதும் இச்சட்டத்தை கட்சி வேறுபாடின்றி பல்வேறு தரப்பினர் வரவேற்றிருப்பதாக கூறினார்.
அபராதத்தை வசூலிக்கும் மாநில அரசுகளின் போக்குவரத்துக் காவல்துறையினர் அந்த வருவாயை மாநில அரசு கருவூலத்தில்தான் செலுத்துகின்றனர்.
அது மத்திய அரசின் வருமானம் அல்ல என்று கூறிய அவர் மாநில அரசுகள் அபராதம் அதிகமாக இருப்பதாக கருதினால் குறைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.