தமிழகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயத்தில் சாம்பல் புதன் நேற்று அனுசரிப்பு✍️ இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்து 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலன பைபிளில் கூறப்பட்டுள்ளது. இதனால் இயேசு உயிரித்தெழுந்த தினத்தை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றனர்
தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாம்பல் புதன்கிழமை நேற்று கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலயத்தில் நேற்று சாம்பல் புதன் திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலிக்கு பங்குதந்தை இசையாஸ் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அவர்களுக்கு சாம்பலால் நெற்றியில் சிலுவை அடையாளம் வரையப்பட்டது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் தவக்கால சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது