கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க 6 பைக்குகளை எரித்த கள்ளக்காதலி கைது✍️ட்ரோன் கடத்திய 2 பேர் கைது✍️இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி நிலத்தை அபரிக்க முயற்சி: 2 பேர் கைது✍️நகை பறித்த 2 பேர் கைது✍️கஞ்சா விற்ற இருவர் கைது✍️மாணவனை வெட்டிய 4 நண்பர்கள் கைது✍️ஆவடி ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு✍️போலீஸ்காரரை தாக்கியவர்கள் கைது✍️கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு வெட்டு: 5 பேருக்கு வலை✍️சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு 21 ஆண்டுகள் சிறை✍️முழு விவரம் -விண்மீன்நியூஸ்
க்ரைம் செய்திகள்
கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க 6 பைக்குகளை எரித்த கள்ளக்காதலி கைது
?சென்னை: மதுரவாயல் சீமாத்தம்மன் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 பைக்குகள் நேற்று முன்தினம் நள்ளிரவு தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் 6 பைக்குகளும் எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த மதுரவாயல் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, ஒரு பெண் பைக்குகளுக்கு தீ வைப்பது தெரியவந்தது. விசாரணையில், அந்த வீட்டில் வசிக்கும் பழனிபாபு குமாரின் கள்ளக்காதலி திவ்யா பைக்கிற்கு தீவைத்து தெரியந்தது.பழனிபாபு குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த திவ்யாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த பழனிபாபு குமாரின் மனைவி அமுதா, திவ்யாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், அமுதாவை பழிவாங்க நினைத்த திய்வா, அவரது பைக்கிற்கு தீ வைத்துள்ளார். இதில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 பைக்குகளும் எரிந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து திவ்யாவை கைது செய்தனர்.
???ட்ரோன் கடத்திய 2 பேர் கைது
?சென்னை: துபாயிலிருந்து நேற்று சென்னை வந்த சிறப்பு விமானத்தில் அனுமதியின்றி 4 ட்ரோன்களை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த கருப்பசாமி (65), சசிகுமார் (31) ஆகிய இருவரை சுங்கத்துறையினர் கைது செய்தனர். இதேபோல், துபாயிலிருந்து 807 கிராம் தங்கத்தை கடத்தி வந்த மன்னார்குடியை சேர்ந்த 2 பயணிகளையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
???இறந்தவர் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி நிலத்தை அபரிக்க முயற்சி: 2 பேர் கைது
?வேளச்சேரி: அடையாறு கஸ்தூரிபா காந்தி நகரை சேர்ந்த எவாலின் கேளிப் என்பவருக்கு சொந்தமான ரூ.4 கோடி மதிப்பிலான 2,880 சதுரடி வீட்டுமனை அதே பகுதியில் உள்ளது. இவர், இறந்ததையடுத்து, அவரது வாரிசு நிர்மலின் சந்திரிகா ப்யூட்லர் அந்த இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்துள்ளார். தற்போது இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதால், கிழக்கு தாம்பரம் திருமங்கை மன்னர் தெருவை சேர்ந்த சுவாமிநாதன் என்பவரிடம் இந்த நிலத்தைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இந்நிலையில், சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நேசன் டிக்சன் கிறிஸ்டோபர் (44), அவரது நண்பர் விருகம்பாக்கம் பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சிவசங்கரன் (45) ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் இந்த இடத்திற்கு உரிமை கொண்டாடினர்.அப்போது, எவாலின் கேளிப் எங்களுக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்துள்ளார் எனக்கூறி, ஆவணங்களை காட்டினர். இதுகுறித்து சுவாமிநாதன் அடையாறு துணை கமிஷனர் விக்ரமிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் அந்த இருவரிடம் இருந்த ஆவணங்களை சரி பார்த்தபோது, எவாலின் கேளிப் பெயிரில் போலி ஆவணம் தயாரித்தது தெரிந்தது. இதையடுத்து, நேசன் டிக்சன் கிறிஸ்டோபர், சிவசங்கரன் ஆகிய இருவரையும் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
???நகை பறித்த 2 பேர் கைது
?புழல்: செங்குன்றம் புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயச்சந்திரன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி(46). நேற்று முன்தினம் காலை தனது வீட்டின் முன்பு கோலம் போட்டு போட்டு கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த பெண் உட்பட 2 பேர் அவரிடமிருந்து 5 சவரன் தாலி சரடை பறித்துக்கொண்டு, தப்பி சென்றனர். புகாரின்பேரில், செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையம்பட்டு சிஎஸ்ஐ பள்ளி தெரு மற்றும் புதுநகர் பாலாஜி கார்டனை சேர்ந்த ராஜா(41), கவிதா(40) ஆகியோரை கைது செய்து ஐந்து சவரனை பறிமுதல் செய்தனர்.
???கஞ்சா விற்ற இருவர் கைது
?புழல்: செங்குன்றம் அடுத்த புள்ளிலைன் புதுநகர் வலம்புரி செல்வ விநாயகர் தெருவில், ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு போலீசார் அந்த வீட்டில் சோதனையிட்டனர். அதில், 50 கஞ்சா பொட்டலங்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சோழவரம் கோமதி அம்மன் நகர் மற்றும் சோத்துப்பெரும்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பிரபாகரன்(29), சரவணன்(23) ஆகியோர் ஆந்திராவில் இருந்து வாங்கி வந்த கஞ்சாவை பதுக்கி வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் மீது, அம்பத்தூர் மற்றும் சோழவரம் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
???மாணவனை வெட்டிய 4 நண்பர்கள் கைது
?ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் தயாளன்(20). சென்னை மாநிலக்கல்லூரியில் பி.ஏ 3ம் ஆண்டு பொருளாதாரம் பயின்று வருகிறார். கடந்த 27ம் தேதி மாலை அதே பகுதி நூலகம் அருகே நடந்து சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில், தயாளன் படுகாயமடைந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில், ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தயாளனின் நண்பர்களான ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேர்ந்த கோகுல்நாத்(22), அஜித்குமார்(22), ஆவடி அருகே மிட்னமல்லியை சேர்ந்த வசந்தவேலன்(23), ஆவடி ராமலிங்கபுரத்தை சேர்ந்த தனசேகர்(24) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், தீபாவளியன்று தயாளனுக்கும், அவரது நண்பர்களுக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனால், ஏற்பட்ட முன்விரோதத்தில் தயாளனை வழிமறித்து வெட்டிக்கொல்ல முயன்றது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த அஜீஸ்(22) தேடுகின்றனர்.
???ஹார்டுவேர்ஸ் கடையில் திருட்டு
?ஆவடி: ஆவடி அடுத்த வெள்ளானூர் அலமாதி சாலை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் ராஜபாண்டியன்(34). இவர், வீட்டருகே ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் கடையை பூட்டாமல் வீட்டிற்கு சாப்பிட சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, கல்லாபெட்டியில் இருந்த ரூ.35 ஆயிரம் மாயமாகி இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அலெக்ஸ் ராஜபாண்டியன் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
???போலீஸ்காரரை தாக்கியவர்கள் கைது
?கும்மிடிப்பூண்டி: வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிபாபு(26). கவரப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பைக்கில் சின்னம்பேடு வழியாக சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சின்னம்பேடு மேம்பாலத்தின் கீழ் சாலையோரமாக மூன்று பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். ஹரிபாபு அவர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிபாபுவை சரமாரியாக தாக்கினர். புகாரின்பேரில், கவரப்பேட்டை போலீசார் சின்னம்பேடு பகுதியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் மற்றும் வருவாய் ஆய்வாளரின் உதவியாளர் தேவராஜ்(44) ஆகியோரை கைது செய்தனர்.
???கள்ளக்காதல் தகராறில் வாலிபருக்கு வெட்டு: 5 பேருக்கு வலை
?பொன்னேரி: – மீஞ்சூர் அடுத்த வல்லூரை சேர்ந்த கிரீஸ்(40) என்பவருக்கும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த பூமா(35). கஞ்சா வியாபாரி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த அரிபாபு(24) என்பவருடன் கடந்த சில மாதங்களாக பூமாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது கிரீசுக்கு தெரியவர கள்ளத்தொடர்பை நிறுத்தும்படி அவர் பூமாவை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அரிபாபு பூமாடன் தொடர்பு வைத்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த கிரீஸ் தனது கூட்டாளிகள் நேற்று முன்தினம் அரிபாபுவை அத்திப்பட்டு புதுநகர் ஐபிபிஎல் கம்பெனி அருகே வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அரிபாபுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஹரிபாபுவின் தந்தை மீஞ்சூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
???சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு 21 ஆண்டுகள் சிறை வேலூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
?வேலூர்: வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(30), ஆட்டோ டிரைவர். இவர் தனது உறவினரின் மகள்களான 7 மற்றும் 9 வயதுடைய இரு சிறுமிகளை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை அவரது தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியின் சகோதரியையும் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுரேஷ்பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கை வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட் நீதிபதி செல்வம் விசாரித்து, சுரேஷ்பாபுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேற்கு வங்க வாலிபருக்கு 20 ஆண்டு சிறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பனியம்பள்ளியில் தங்கி தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேற்கு வங்க வாலிபர் ரெபியுல் மண்டல் (26). கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதே பகுதியில் வசித்து வந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் ரெபுயுல் மண்டலுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
???இலவச பாடப்புத்தகங்கள் சிக்கிய விவகாரம்: காயலான் கடை உரிமையாளர் கல்வித்துறை ஊழியர் கைது
?மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் காயலான் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்தது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடிக் கப்பட்டது. இதில் 2,066 கிலோ எடையுள்ள 3,134 புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கடை உரிமையாளர் பெருமாள்சாமியை போலீசார் விசாரணை செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் கிட்டப்பா மேல்நிலைப்பள்ளியில் உள்ள அரசு புத்தக கிடங்கின் பொறுப்பாளரும், மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளருமான மேகநாதன் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து மேகநாதன் (40), பெருமாள்சாமி (55) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜாராமன் கூறுகையில், மாணவர்களுக்கு வழங்க கூடிய இலவச பாடப்புத்தகங்களை காயலான் கடையில் விற்ற இளநிலை உதவியாளர் மேகநாதன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
???போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்: பல் டாக்டர் குடும்பத்துடன் பெங்களூருவுக்கு ‘எஸ்கேப்’: கைது செய்ய விரைந்தது தனிப்படை
?சென்னை: மருத்துவ கலந்தாய்வில் போலி நீட் தேர்வு மதிப்பெண்கள் கொடுத்த விவகாரத்தில், பல் டாக்டர் தனது குடும்பத்துடன் பெங்களூரு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். தமிழக மருத்துவ கலந்தாய்விற்கு போலி நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் சமர்ப்பித்தது. போலி தரவரிசை பட்டியல், கலந்தாய்வுக்கான போலி அழைப்பு கடிதம் தயாரித்து மோசடி செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பல் டாக்டர் பாலசந்திரன் ஆகியோர் மீது பெரிய மேடு காவல்நிலையத்தில் மருத்துவ கல்வி துணை இயக்குநர் செல்வராஜன் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் மாணவி தீக்ஷா மற்றும் அவரது தந்தை பாலசந்திரன் மீது வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராக வேண்டும் என்று 3 முறை சம்மன் அனுப்பினர். ஆனால் மாணவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் பரமக்குடிக்கு சென்றனர். ஆனால் மாணவியின் குடும்பத்தார் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.மாணவியின் தாத்தா மற்றும் பாட்டி வீடும் பூட்டப்பட்டு உள்ளது. போலி நீட் மதிப்பெண் சான்று குறித்து மாணவியின் தந்தை பாலசந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேநேரம் தங்களை கைது செய்ய கூடாது என்றும் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து மாணவி மற்றும் அவரது தந்தை முன்ஜாமீன் பெறுவதற்குள் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் பல் டாக்டர் தனது குடும்பத்துடன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர்.
???7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு வாலிபருக்கு தூக்கு தண்டனை: புதுகை மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
?புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 7வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுகை மகிளா கோர்ட் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சிறுமியின் பொற்றோர் புகாரின் பேரில், ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் மறுநாள் ஜூன் 30ம்தேதி மாலை ஏம்பல் ஏரியில் காட்டாமணக்கு செடிகளுக்குள் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாள். அப்போது, சிறுமியின் முகம், தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து போலீசார் உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையில், சிறுமியை அப்பகுதி பூக்கடைக்காரர் சாமிவேல் என்ற ராஜா (25) என்பவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ராஜாவை கடந்த ஜூலை மாதம் 1ம்தேதி கைது செய்தனர்.இது தொடர்பாக ராஜா மீது போக்சோ சட்டம், கற்பழிப்பு, கொலை செய்தல், தடயங்களை மறைத்தல், வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பு வக்கீலாக அங்கவி ஆஜராகி வாதிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்து நீதிபதி சத்தியா இரட்டை மரண தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
?அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: சிறுமியை கொலை செய்ததற்காக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 கீழ் மரண தண்டனையும், போக்சோ சட்டம் இரண்டு பிரிவுகள், 2019ன் பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் திருத்த சட்டம் கீழ் மரண தண்டனையும், சிறுமியை கடத்தியதற்காக இந்திய தண்டனை சட்டம் கடத்தல் பிரிவு 363 கீழ் 7 வருடம் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், குழந்தையை கொலை செய்து விட்டு சாட்சியத்தை மறைத்ததற்காக 7வருடம் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த குழந்தையை கற்பழித்து கொலை செய்தமைக்காக ஆயுள் வரை சிறையில் இருக்கும் தண்டனையும், அபராத தொகையை கட்ட தவறினால் 4 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. மேலும் சிறுமியின் தாயாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று நேற்று இரவே அடைத்தனர்.